இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
132
சுந்தர சண்முகனார்
இது பாடல் பகுதி. இந்த மரபு இப்போது எல்லா இடங்களிலும் பின்பற்றப் படுவதாகத் தெரியவில்லை.
கோவலனும் கண்ணகியும் இறந்த செய்தி யறிந்ததும் கவுந்தி உண்ணா நோன்பு பூண்டும், மாதரி தீக்குளித்தும் இறந்தனராம். உறவினரோ - நெருங்கிப் பழகியவரோ இறப்பின், சிலர் இவ்வாறு இறப்பது இந்தக் காலம் போல அந்தக் காலத்திலேயே உண்டு எனத் தெரிகிறது.
இவ்வாறு அன்று பல்வகைப் பழக்க வழக்க மரபுகள் இருந்தன.