பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

145


கொடி மாதவிக்கு மடந்தை மாதவி ஒப்புமையாக்கப்பட்டுள்ளாள். பொ ரு த் த மா ன உவமை. சொல் விளையாட்டு இது.

கோசிகன் கோவலனை நோக்கி, நின் பிரிவால் உன் தந்தையும் தாயும் சுற்றமும் மணி இழந்த நாகப்பாம்பு போலவும் உயிர் பிரிந்த உடம்புபோலவும் நிலைமாறிக் கிடக்கின்றனர் என்றான்.

"இருகிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும்
அருமணி இழந்த காகம் போன்றதும்
இன்னுயிர் இழந்த யாக்கை என்னத்
துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும்"
(13:57.60)

கோவலனுக்கு மாணிக்கமும் உயிரும் உவமையாக்கப் பட்டுள்ளன. மற்றும், பெரும்பெயர் மூதூர் இராமன் பிரிந்த அயோத்திபோல் பேதுற்றதாம். இங்கே கோவலனுக்கு இராமன் ஒப்புமை (அருந்திறல்: இராமன்).

"அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர்பெரும்பே துற்றதும்"
(13:65,66)

காட்சிக்காதை: சேரன் செங்குட்டுவன் பேராற்றங் கரையிலே மணல் குன்றிலே வந்து தங்கியிருந்தபோது, மலைவாழ் மக்கள் ப ல வ கை யா ன காணிக்கைப் பொருள்களைச் சுமந்து கொண்டு வந்து செங்குட்டுவனுக்குத் கொடுக்க இருந்தனர். இதற்குச் சேரனின் சிறப்பை அறிவிக்கும் உவமை இன்று கூறப்பட்டுள்ளது. சேரனிடம் தோற்ற பகை மன்னர்கள் அவனுக்குப் பணிந்து திறைப் (கப்பப்) பொருளைச் சுமந்து கொண்டு வந்து சேரனைக் காணும் வாய்ப்புக்காக நின்றபடிக் காத்திருந்தார்களாம். அதுபோல், மலைவாழ் மக்கள் காத்திருந்தார்களாம்.

"இறைமகன் செவ்வி யாங்கனும் பெறாது
திறைசுமந்து நிற்கும் தெவ்வர் போல"
(25:35, 36)