பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17. காப்பியத்தில் கானல் வரியின் இடம்

திருப்பு முனை

சிலப்பதிகாரக் காப்பியத்தில் காணல் வரி என்னும் காதை ஒரு திருப்பு முனையாகும். கண்ணகிக்குச் சிலை செய்வதற்கு உரிய கருங்கல்லைச் சுமக்கச் செய்து வடபுலத்துக் கனக விசய மன்னர்களின் முடித்தலையை நெரித்தது இந்தக் கானல் வரிப்பாட்டு தான் என மாடல மறையோன் சேரன் செங்குட்டுவனிடமே கூறினான். இந்த வரிப்பாட்டு இல்லையெனில், மதுரைக் காண்டத்திற்கும் வஞ்சிக் காண்டத்திற்கும் இடம் இருந்திருக்காது.

கானல் = கடற்கரைச் சோலை வரி=ஒருவகைப் பாடல் கோவலனும் கண்ணகியும் கானலில் அமர்ந்து பாடிய பாட்டுகள் கானல் வரியாகும்.

புகாரிலே இந்திர விழா நடைபெற்றது. அவ்விழாவில் வழக்கம்போல் மாதவி ஆரவாரமாக ஆடல் பாடல் நிகழ்த்தினாள். பலரும் கண்டு களித்தனர். கோவலனால் இதைப் பொறுக்க முடியவில்லை. தனக்கென்று மாதவி உரிமையாய் விட்டபிறகு, பலரும் களிக்க ஆடலாமா என எண்ணி வெறுப்புற்றான். இது சில ஆடவர்க்கு உரிய ஓர் இயல்பு. தான் எவளை வேண்டுமானாலும் விரும்பலாம் - ஆனால், தன் மனைவி மட்டும் வேறு எவனையும் ஏறெடுத்துக் கூடப் பார்க்கலாகாது. ஒரு மாப்பிள்ளைக்குப் பெற்றோர்கள் பெண் பார்த்துவிட்டு வந்தார்கள். இந்த மாப்பிள்ளை, இதற்கு முன் வேறு மாப்பிள்ளை எவனாவது வந்து அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டுப் போனானா?.