சிலம்போ சிலம்பு!
281
இந்த இருவகைக் கொள்கையினருள் முதல் கொள்கையினர் தம் கொள்கைக்கு அரணாக முன்னிறுத்தும் சான்றுகள் சில:
“மலைப்பருஞ் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய
இந்தப் பாடல் பகுதியில், “பிறப்பில் குன்றாப் பெருந்தோள் மடந்தை” என மாதவி குறிப்பிடப்பட்டுள்ளாள். அதனால், இழி தொழில் செய்யும் பரத்தையர் குலத்தினள் என்று அவளைக் கூறமுடியாது.
மாதவி கோவலனைப் பொருள் கொண்டு வரச் சொல்லவில்லை. கோவலன் வேறுவழியில் பொருளை விரயம் பண்ணியிருப்பான்.
கோவலனை அடைந்த மாதவி இறுதிவரையும் அவனை விட்டுப் பிரியவில்லை.
கோவலனுக்குப் பிள்ளை பெற்று நற்குடி மகளாகவே மாதவி வாழ்ந்திருக்கிறாள்.
அரசனால் சிறப்பிக்கப்பெற்றுத் தலைக்கோல் விருதும் ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மதிப்புடைய பசுமணி மாலையும் பெற்றிருக்கிறாள். இழி தொழில் புரிபவளாயிருப்பின் அரசன் மதிப்பானா?
கோவலன் தன்னைவிட்டுப் பிரிந்தபின், அவனைத் திரும்ப வருமாறு வேண்டி இருமுறை மடல் அனுப்பியுள்ளாள்.
கோவலன் இறந்த செய்தியைக் கேட்டதும், தலையை மழித்து மொட்டையடித்துக் கொண்டு துறவு பூண்டாள்.
அரசவையிலும் விழாக் காலங்களிலும் ஆடல் பாடல் செய்யும் மாதவி குலம் வேறு - பரத்தையர் குலம் வேறு.