பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314

சுந்தர சண்முகனார்


314 சுந்தர சண்முகனார்

சாவக நோன்பிகள் = இல்லறத்தில் இருந்தபடியே நோன்பு கொள்பவர்கள். கோவலனை நோன்பிகள் எனப் பன்மையில் குறிப்பிட்டது, 'கோவலன் அவர்கள்' என்று கூறுவது போன்ற சிறப்பு வழக்காறாகும். கண்ணகியையும் சேர்த்துக் கூறாமல் கோவலனை மட்டும் குறித்திருப்பது, உணவு ஆக்கப் போகிறவள் கண்ணகி ஆதலின் என்க.

நாள் வழிப் படுஉம் உணவு = (நாள் = பகல்) பகலில் ஆக்கும் உணவு. சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் நாள்வழிப் படுஉம் அடிசில் ஆக்குதல் எனப்பட்டுள்ளது. சாவக நோன்பிக்கும் பகலிலே உணவு ஆக்குதலுக்கும் இடையே உள்ள பொருத்தம் என்ன? கோவலன் சமணன். சமண சமயத்தினர் இரவில் விளக்கு ஏற்ற மாட்டார்கள். விளக்கில் விட்டில் பூச்சி விழுந்து இறந்துவிடும் ஆதலின், கொல்லா நோன்பு காக்க இவ்வாறு செய்வர். பொழுது சாய்ந்து இருட்டு வருவதற்குள் உண்டுவிடுவர். புதுச்சேரிக்கு மேற்கே பத்துக்கல் தொலைவில் நல்லாற்றுார் என்னும் ஒரு சிற்றுார் உள்ளது. அவ்வூரார் விளக்கு வைப்பதற்கு முன் பொழுதோடு உண்டுவிடுவர் . அவ்வூருக்கு இருட்டினபின் விருந்தினர் சென்றால் உண்பது அரிது - எனக் கடலூரார் நல்லாற்றுாரினரைக் கிண்டல் செய்வது உண்டு. இது இந்தக் காலத்தில் நடக்கவில்லை. முன்பு எப்போதோ நடந்திருக்க வேண்டும். கடலூர்ப் பகுதியில்தானே நாவுக்கரசர் சமண மதத்தில் சேர்ந்திருந்தார். கடலூர்த் தேர்தல் தொகுதியில் தான் நல்லாற்றுார் உள்ளது. எனவே, நல்லாற்றுாரில் சமண சமயம் பரவியிருந்த காலத்தில் இது நடந்திருக்கலாம். பன்னூல்கள் இயற்றிய கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச அடிகளாரின் அடக்கம் (சமாதி) அமைந்துள்ள சிறப்பு இவ்வூருக்கு உண்டு.

கோவலன் சமண சமயத்தவன் - அதனால்தான் நாள் (பகல்) உணவு ஆக்கப்பட்டது என்னும் எனது கருத்து ஓர்