28
சுந்தர சண்முகனார்
என்னும் பகுதியும், மணிமேகலைப் பதிகத்தின் இறுதியில் உள்ள
“இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப
வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த் திறம் மணிமேகலை துறவு
என்னும் பகுதியும் ஈண்டு குறிப்பிடத் தக்கன.
சிலப்பதிகாரத்தின் இறுதியில் ‘நூல் கட்டுரை’ என்னும் தலைப்புடைய பாடலின் இறுதியில் உள்ள
“மணிமேகலைதிேல் உரைப்பொருள் முற்றிய
என்னும் பகுதி மிகவும் குறிப்பிடத்தக்கது. மணிமேகலை என்னும் தொடர்நிலைச் செய்யுளோடு கூட்டி உரைக்கப்படும் பொருள் முடிந்த சிலப்பதிகாரக் காப்பியம் முற்றுதல் உற்றது-என்பது இதன் பொருள்.
இதனால், இளங்கோவும் சாத்தனாரும் பேசிக் கொண்டு இரட்டைக் காப்பியங்களை ஒருவர்க்கொருவர் அறிவித்துக் கொண்டு இயற்றினர் என உய்த்துணரலாம்.
மற்றும், இரண்டு காப்பியங்களிலும் பல செய்திகள் ஒத்துள்ளன. அவை:
இரண்டிலும் முப்பது கதைகள் உள்ளன. இரண்டிலுமே ஒவ்வொரு காதையின் முடிவிலும் ‘என்’ என்னும் ஈற்றுச் சொல் உள்ளது.
பாசறை போல் பல்வேறு பறவைகள் வீற்றிருத்தல்-யானை முன் பறையறைதல்-பூதச் சதுக்கம்-முசு குந்தன் நிலை-தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் நிலை-சமண புத்தச்சார்பு-பல மதங்கள் பற்றிய விவரம்.