சிலம்போ சிலம்பு!
31
தோன்றினும், துறவு மேற்கொண்டோர்க்கு இஃதல்லவோ பெரிய தகுதி (இலக்கணம்) ஆகும். இனி, தெய்வத் தொடர்பாக அவர் கூறியுள்ள செய்திகளைக் காதை வாரியாகக் காணலாம்.
பதிகம்
மதுரையில், முடியில் கொன்றை மாலையணிந்த சிவன் எழுந்தருளியுள்ள வெள்ளியம்பலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
“கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில்
என்பது பாடல் பகுதி. சிவனுக்கு உரிய அம்பலங்கள் ஐந்து எனக் கூறுவர். அவை: பொன்னம்பலம், வெள்ளியம்பலம், இரத்தின அம்பலம், தாமிர அம்பலம், ஒவிய (சித்திர) அம்பலம் என்பன. சிதம்பரம் - பொன்னம்பலம். மதுரை - வெள்ளியம்பலம். திருவாலங்காடு - இரத்தின அம்பலம். திருநெல்வேலி - தாமிர அம்பலம். நெல்லை மாவட்டத்துக் குற்றாலம் - ஓவிய அம்பலம் ஆகும். இவ்வைந்தனுள் ஒசறாகிய மதுரை வெள்ளியம்பலம் பதிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனையறம் படுத்த காதை
கோவலன் கண்ணகியின் நலம் பாராட்டுகிறான். ஆறு முக்களுடைய முருகன் தன் வேலை நீள வாட்டத்தில் இரண்டாகப் பிளந்து நின் இரண்டு கண்களாகத் தந்துள்ளான் என்கிறான். பெண்டிரின் கண்கட்கு வேலை உவிக்கும் மரபுப்படி இந்தக் கற்பனையுள்ளது:
“அறுமுக ஒருவன்ஓர் புெறுமுறை இன்றியும்
இருமுறை கானும் அன்றே
அஞ்சுடர் நெடுவேல் ஒன்றுகின் முகத்துச்