பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28. வஞ்சி - சேரர் சிறப்புகள்

வஞ்சியில் இருந்து ஆண்ட சேரர்களின் சிறப்புகள் மிகுதி. கோதமன் என்னும் தமிழ் மறையவனுக்கு மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் சேரன் வேள்வியின் வாயிலாக மேலுலக வாழ்வளித்தான்.

சோழநாட்டிலிருந்து வந்த பராசரன் என்னும் அந்தணனுக்குச் சேரன் நிறைந்த செல்வம் அளித்தான். அவன் பின் வருமாறு சேரனை வாழ்த்தினான்:

"விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி
கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி
விடர்ச் சிலை பொறித்த வேந்தன் வாழி
பூந்தண் பொருநைப் பொறையன் வாழி
மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்க" (23:80-84)

என்பது வாழ்த்து.

பாண்டியன் நெடுஞ்செழியன் செங்கோல் தவறியதன் காரணமாக இறந்து விட்டான் என்பதை யறிந்த சேரன் செங்குட்டுவன், அ ர சா ளு ம் தொழில் கடினமானது என்றான். அதாவது மழை பெய்யாவிடினும், தகாத முறையில் குடிமக்களின் உயிர் போயினும், அரசன் செங்கோல் தவறானது என்று உலகம் உரைக்கும் என்பதை எண்ணும் போது பெரிதும் அச்சம் தோன்றுகிறது. எனவே, கொடுங்கோலுக்கு அஞ்சிக் குடிமக்களை நன்முறையில் காக்கக் கடமைப்பட்டுள்ள அரசக்குடியில் பிறத்தல் துன்பம் தருவதல்லது போற்றத்தக்கதன்று என்று கூறினான்.