பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

383



2. இதோ உள்ள பொன் வளையல் அணிந்த பெண்ணின் தோள்கள், இதோ உள்ள நெற்றிச் சுட்டி பொருந்திய காளையின் மேலேறி அடக்குபவனுக்கு உரியவையாகும்.

3. இதோ உள்ள முல்லை மலர் சூடிய கூந்தலையுடைய கன்னி, வலிமை மிக்க இந்த இளங்காளையை அடக்குபவனுக்கு உரியவள்.

4. கொடியனைய இந்தப் பெண்ணின் தோள்கள், சிறு சிறு நுண்ணிய புள்ளிகளை உடைய இந்த வெள்ளைக் காளையை அடக்குபவனுக்கு உரியனவாம்.

5. இந்தப் பொன் புள்ளிகளை உடைய வெள்ளைக் காளையை அடக்குபவனுக்கே, இந்தக் கொடி போன்ற நங்கையின் முலைகள் உரியனவாம்.

6. இந்தக் கொன்றைக் கூந்தலாள், இந்த வெற்றி வாய்ந்த இளங்காளை மேல் ஏறி அடக்குபவனுக்கு உரிய வளாவாள். - . . . .

7. இந்தப் பூவைப் புதுமலர் குடியிருப்பவள், இதோ: உள்ள இந்தத் தூய வெள்ளை நிறக் காளையைத் தழுவி அடக்குபவனுக்கு உரியவள் என்றெல்லாம் மாதரி கூறினாள். இவற்றிற்கு உரிய பாடில் பகுதிகள் வருமாறு:

1. காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறும் இவ்
வேரி மலர்க் கோதையாள் சுட்டு

2. நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய இப்
பொற்றொடி மாதராள் தோள்

3. மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள் இம்
முல்லையம் பூங்குழ லாள்

4. நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே யாகும் இப்

பெண் கொடி மாதர்தன் தோள்