சிலம்போ சிலம்பு!
389
ஆய்வளையல் அணிந்த தோழியே! மலைநாடனாகிய என் காதலனால் உண்டான நோயைத் தீர்க்க வேலன் வருமாயின், உண்மை நோயை அறியாததால் அவனால் தீர்க்க முடியாதாதலின் அவ்வேலன் அறிவிலியாவான். மற்றும், அவ்வேலன் மேல் ஏறியாடச் செய்யும் குருகுபெயர்க் குன்றம் தொலைத்த முருகனும் மடவோனே யாவான். இது நகையாகின்றே!
செறிவளைக் கை நல்லாய்! வெறிகமழ் வெற்பனாகிய என் காதலனால் உண்டான நோயைத் தீர்க்க வரும் வேலன் மடையன். ஆலமர் செல்வனாகிய சிவனின் மகனாகிய முருகன் அவன்மேல்வரின் அவ்வேலனைவிடப் பெரிய மடையனாவான். இது நகையாகின்றே!
நேரிழை நல்லாய்! மலை நாடனாகிய என் தலைவனது மார்பு தந்த கொடிய நோயைத் தீர்க்க வரும் வேலன் மடவோ னாவான். கடப்ப மாலை யணிந்த முருகன் வேலன்மேல் ஏறிவரின், அவனினும் இவன் கடைந்தெடுத்த மடவோனாவான். இது நகையாகின்றே! என்று தலைவி தோழிக்குக் கூறினாள். இனிப் பாடல் பகுதிகள் வருமாறு:
1. ‘இறைவனை கல்லாய்! இது நகை யாகின்றே
கறிவளர் தண்சிலம்பன் செய்த நோய் தீர்க்க
அறியாள்மற்று அன்னை அலர் கடம்பன் என்றே வெறியாடல்
தான்விரும்பி வேலன் வருகென்றாள்:’
2. ‘ஆய்வளை நல்லாய்! இது நகை யாகின்றே
மாமலை வெற்பன்நோய் தீர்க்கவரும் வேலன்;
வருமாயின் வேலன் மடவன்; அவனின்
குருகுபெயர்க் குன்றம் கொன்றான் மடவன்.’
3. ‘செறிவளைக் கை நல்லாய்! இது நகையாகின்றே
வெறிகமழ் வெற்பன்நோய் தீர்க்கவரும் வேலன்;
வேலன் மடவன்; அவனினும் தான்மடவன்