பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. கனா

சிலப்பதிகாரத்தில் ‘கனாத்திறம் உரைத்த காதை’ என்னும் பெயரில் ஒரு காதை உள்ளது. கானாக்களைப் பற்றிப் பல விதமான கருத்துகள் பலரால் அறிவிக்கப்பட்டுள்ளன. கனா நூல் எனப் பெயரிட்டு, அந்தாதித் தொடையாய் முப்பது கட்டளைக் கலித்துறைச் செய்யுட்கள் அமைத்துப்பொன்னவன் என்பவர் ஒரு நூல் எழுதியுள்ளார். கனா பற்றிக் கூறப்படும் சில கருத்துகள் வருமாறு:

மக்கள் உறங்கும்போது உடல் படுக்கையில் கிடக்க, உயிர் பிரிந்து சென்று பல செயல்களில் ஈடுபட்டு மீண்டும் வந்து உடம்பில் கூடுகிறது.

மக்களின் எண்ணங்கள் அல்லது விருப்பங்களே உறங்கும்போது கனவாக மலர்கின்றன.

ஐம்புலன்களாலும் இதற்குமுன் பட்டறிந்த நிகழ்ச்சிகளே - நுகர்வுகளே கனவில் பல மாறுதல்களுடன் தோன்றுகின்றன.

நல்ல கனாவாயின் பின் நல்லது நடக்கும்; கெட்டதாயின் பின் கெட்டதே நிகழும்.

வைகறையில் கண்ட கனா அவ்வாறே பலிக்கும்

சீவகசிந்தாமணி 219

கனவுக்கும் பின் நனவில் (பகலில்) நடக்கும் நிகழ்ச்சிகட்கும் தொடர்பே இல்லை.