பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

சுந்தர சண்முகனார்


அடியார்க்கு நல்லார் இந்தக் கதையைக் குறிப்பிட்டு இதற்கு மேற்கோள் சான்றாக ஒரு பாடலையும் தந்துள்ளார். அப்பாடல் வருக:

“வயந்த மாமலை நயந்த முனிவரன்
எய்திய அவையின் இமையோர் வணங்க,
இருந்த இந்திரன் திருந்திழை உருப்பசி
ஆடல் நிகழ்க பாடலோடு ஈங்கென,
ஓவியச் சேனன் மேவினன் எழுந்து
கோலமும் கோப்பும் நூலொடு புணர்ந்த
இசையும் கடமும் இசையத் திருத்திக்
கரந்து வரல் எழினியொடு புகுந்தவன் பாடலில்
பொருமுக எழினியில் புறந்திகழ் தோற்றம்
யாவரும் விழையும் பாவனை யாகலின்
நயந்த காதல் சயந்தன் முகத்தின்
கோக்கெதிர் நோக்கிய பூக் கமழ் கோதை
நாடிய வேட்கையின் ஆடல் நெகிழப்
பாடல் முதலிய பல்வகைக் கருவிகள்
எல்லாம் நெகிழ்தலின் ஒல்லா முனிவரன்
ஒருதலை இன்றி இருவர் நெஞ்சினும்
காமக் குறிப்பு கண்டனன் வெகுண்டு
சுந்தர மணிமுடி இந்திரன் மகனை
மாணா விறலோய் வேணு ஆகென
இட்ட சாபம் பட்ட சயந்தன்
சாப விடையருள் தவத்தாய் நீயென
மேவினன் பணிந்து மேதக உரைப்ப
ஓடிய சாபத்து உருப்பசி தலைக் கட்டும்
காலைக் கழையும் நீயே யாகி
மலையமால் வரையின் வந்து கண்ணுற்றுத்
தலையரங் கேறிச் சார்தி என்றவன்
கலக நாரதன் கைக்கொள் வீணை

அகில் அம்பன மாகெனச் சபித்துத்