பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சபாவுக்குப் போகணும். ராத்திரிக்கு மறுபடியும் பார்க்கலாமே!” என்று எழுந்தார் காமராஜ்.

“லோக் சபாவிலே இன்றைக்கு அப்படி என்ன முக்கியம்?” என்று கேட்டேன்.

“அங்கே பதவிக்காக அப்படியும். இப்படியுமா இருக்கும் சிலர் என்னைச் சந்தித்துப் பேசணும்னு நினைக்கிறாங்க. அவங்க என் வீட்டுக்கு வரமுடியாது. அப்படிப்பட்டவங்களும் என்னைப் பார்த்துப் பேச நான் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டாமா? அதுக்குச் சரியான இடம் லோக் சபா லெளஞ்சுதான். அந்த இடத்திலேதான் யார் வேணாலும், யாரை வேணாலும், பொதுவா சந்திச்சுப் பேசலாம்” என்று அர்த்த புஷ்டியுடன் சிரித்துக் கொண்டே எழுந்தார் காமராஜ். நான் புன்னகையுடன் விடை கொடுத்தேன்.

90