பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38 எல்லாம் காரணம் என்ன? அணுவைப் பிளந்து ஆராய்ச்சி செய்த வர்கள் அணுவுக்கு உள்ளேயே ஏதோ ஒரு அசைவு இருக்கிறது என்று கூறுகிருர்கள். அங்ங்னமே இந்த இயற்கையான பெரிய அண்டத்துக்கு உள்ளே இருந்து இறைவன் அசைகிருன்-அசைக் கிருன். இதுவே நடராசப் பெருமானின் கூத்து. பெருமான்பரமன்-ஆடுகிருன்; எல்லாம் அசைகின்றன. இயங்குகின்றன. ஆகவே நம்மை இயங்க வைக்கும் நடராசப்பெருமானை வணங்கு வோம். வாழ்த்துவோம். Luri #$r Gyııio–PAARTHTHAALUM பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் Paarththaalum ninaiththaalum padiththaalum padikkap பக்கம்நின்று கேட்டாலும் பரிந்துஉள் உணர்ந்தாலும் Pakkamnindru kettaalum parindhuull unnarndhdaalum ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும் Eerththaalum pidiththaalum katti annaiththaalum இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பே Iththanaikkum thiththikkum iniththasuvaik karum bē வேர்த்துஆவி மயங்காது கனிந்த நறும் கனியே Vērththuaavi maya nga adhu Kanindhanarrum Kaniyē மெய்ம்மை அறிவு ஆனந்தம் விளக்கும்அருள் அமுதே Meimmai arrivu aanandham villakkumarull a mudhē! தீர்த்தாவென்று அன்பர் எலாம் தொழப் பொதுவில் நடிக்கும் Theerththaavendru an oar elaam thozhap podhuvil nadikkum தெய்வநடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே Dheivanadaththu a rasē yen sirru mozhi ētru arullēt பார்த்த பொழுதிலும்-நினைத்த பொழுதிலும்-படித்த பொழுதிலும்-ஒருவர் (இறைவன் புகழைப்) படித்த பொழுதும் பக்கத்தில் நின்று கேட்ட பொழுதிலும் - விரும்பி மனத்தில் கொண்டு உணர்ந்த பொழுதிலும்-இழுத்தபொழுதிலும்பிடித்துக் கொண்ட பொழுதிலும்-கட்டி அனைத்துக்கொண்ட பொழுதிலும்-இவற்றுக்கு எல்லாம் தித்திக்கும் இனிமையான கரும்பு போன்றவனே.