பக்கம்:சிவ வழிபாடு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை என்று சொல்வது பொய் இந்த உடம்பு மண் ஆவது உறுதி அழிய வேண்டியது பிறவி ஆகிய கடலே ஆகும். இந்த உடம்பு) பசி நோயை உண்டாக்குகிற பையை உடையது. ஆகவே (பிறவி நீங்க வேண்டுமாயின்) காலம் தாழ்க்காது தருமம் செய்யுங்கள். பெரிய கண்களையுடைய திருமாலும், பிரமனும் நிலத்தின் கீழும், வானின் மேலும் சென்று தேடினார்கள். அங்ங்னம் தேடுமாறு நின்ற இறைவனுடைய திருக்கேதாரத்தைக் கூறுங்கள். Life is illusive; this body will become earth indeed. You should get rid of the ocean of birth. After all the body has a bag which gives forth appetite - a disease indeed. Do virtuous deeds at once. The big eyed Thirumaal and Brahma born in the flower flew up in the sky and dug deep to find out the Feet of the Lord. The Lord’s abode is Tirukkeesdaaram; chant it. நாவின்மிசை அரையன் னொடு தமிழ் ஞானசம்பந்தன் Naavinnisai araiyan nodu thamizh gnaanasambandhan யாவர் சிவன் அடியார்களுக்(கு) அடியான் அடித்தொண்டன் Yaavar Sivan adiyaargallukku adiyaan adiththonndan தேவன் திருக்கேதாரத்தை ஊரன் உரை செய்த Dhevan Thirukkedhaaraththai uran urai seydha பாவின் தமிழ் வல்லார் பரலோகத்(து) இருப்பாரே Paavin thamizh vallaar paralogaththu iruppaare. திருச்சிற்றம்பலம் தமிழில் வல்ல திருநாவுக்கரசரும் திருஞானசம்ப்ந்தரும் சிறந்த சிவனடியார்கள். அவர்களோடு யார்யார் சிவனடியார்களோ அவர்களுடைய அடியார்களுக்குத் தொண்டன் ஊரன். அதாவது ஆரூரன் என்ற பெயர் உடையவன் ஆகிய சுந்தரன் சிவபெருமானுடைய திருக்கேதாரம் என்ற தலத்தைப் பாடியிருக்கிறான். அந்த இனிய தமிழ்ப்பாடல்களில் வல்லவர்கள் மேலுலகத்தில் இருப்பார்கள். 51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/61&oldid=833631" இலிருந்து மீள்விக்கப்பட்டது