பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியலில் பாய்ச்சல் 2í ஒரு சமயம் ரெட்டி அரசுப் பக்கத்தின் பல செயல்களில் உள்ள விட்டகுறை-தொட்டகுறைகளை அம்பலப்படுத்திப் பேசுங் கால், முதல் அமைச்சர் தன்னிடம் ரெட்டி ஏதோ ஒரு தனிச் சலுகை கேட்டுத் தனக்கு எழுதியதாக நம்பப்பெறும் கடிதமொன் றைத் தனது சட்டைப் பையினின்றும் எடுத்துக் காட்டி அவரை அச்சுறுத்தினர். தகுவழி காணும் திறம் உடைய இந்த உறுப் பினரை அவ்வளவு எளிதாக அச்சுறுத்தி வாயடைத்து அமைதியை நிலைநாட்ட முடியாது. ரெட்டி குத்தலான சிலேடைப் பேச்சால் மறுமொழி தந்தார்: 'ஆனால் இங்கிலாந்தில் காதலர்கள் தம் மிடையே சச்சரவு செய்துகொள்ளுங்கால் தாம்தாம் பெற்ற கடி களைத் திருப்பித் தந்துவிடுகின்றனர்' என்ருர். முதல் அமைச்சருக்கு ரெட்டி எப்பொழுதும் குத்தும் முள் ளாக இருந்து வந்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது. நிதி ஒதுக்கீடுகளைப்பற்றி இவர் எடுத்துக்காட்டிப் பேசிய குறை-நிறை பேச்சுகள் சிறப்பாகப் பயன் விளைவிக்கத் தக்கனவாக அமைந்தன. நாட்டின் கல்வி வளர்ச்சியின்பொருட்டு பிச்சைக்காரத்தனமான நிதி ஒதுக்கீடு ரெட்டியின் சினத்தைத் தூண்டிவிட்டது. சட்ட மறுப்பு இயக்கத்தினால் போதுமான அளவு அரசு வருமானம் வசூலாகாததே இதற்குக் காரணம் என்று அரசு எடுத்துக்காட்டி யதற்கு விளக்கக் குறிப்பு தரும் வகையில் அரசுக்கு எதிராக அது சொன்னதையே திருப்பிவிட்டார். மக்களிடம் நடந்து கொள்ளத் தகுதியற்ற திறமையை அது காட்டிக் கொடுக்கின்ற தென்றும், அது வரிகொடா இயக்கத்தின் வெற்றியை மறைமுக மாக ஒப்புக்கொண்டதாகும் என்றும் இவர் கூறினர். எல்லா வகையிலும் கல்வியைப்பற்றிய இவர்தம் சட்டமன்றப் பேச்சுகள் யாவும் தகவல்களைத் தருவனவாகவும் உணர்ந்து அறியக்கூடியனவாகவும் அமைந்திருந்தன என்று எல்லோராலும் கருதப்பெற்றன. இவருடைய பின்னணியை மதித்துக் கருதுங்கால் இதை மட்டிலுந்தான் எதிர்பார்க்கமுடியும். சென்னைப் பல்கலைக் கழகச் சீர்திருத்தம்பற்றி நடைபெற்ற வாதப் போரில் இவர் தீவிர பங்கேற்ருர், இது சம்பந்தமாக ஆராய அமைக்கப்பெற்ற குழு விலும் இவருக்கு முக்கியமான பொறுப்பு தரப்பெற்றிருந்தது. ஆந்திரர்களின் அவாவைப் பற்றியெல்லாம் விரைந்து குரல் கொடுப்பவரான ரெட்டி ஆந்திராவுக்குத் தனிப் பல்கலைக் கழகம் நிறுவப்பெறுவதற்கான திட்டத்தை அரசு மேற்கொள்ளப் போகிறது என்பதை அறிந்து இயல்பாகவே மகிழ்ச்சியடைந்தார். மேல் தோற்றத்தில் இஃது அவர்களுடைய துணை நிலையான தேசிய ஊழினை நிறைவேற்றுவதில் முதற்படியாக அமைந்தது. ஆனல் அந்தத் திட்டத்தில் மேற்கொள்ளப்பெற்ற திருத்தங் 2