பக்கம்:சீதா கல்யாணம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 17

வந்து சரண் புகுந்து விடுகிறான்.இராம-ராவண யுத்தம் நடக்கிறது. கும்பகர்ணன், இந்திரசித்தன் முதலிய வீரர்கள் எல்லோரும் மாண்டு மடிகிறார்கள்.

கடைசியில், இராமன் இராவணனையும் கொன்றுவெற்றிமாலை சூடுகிறான்; சீதையும் சிறையிலிருந்து மீட்கப்படுகிறாள். இலங்கா நகரத்தை விபீஷணனுக்குப் பட்டம் கட்டி வைத்துவிட்டு, இராமன் சீதா சமேதனாய் அயோத்தி வந்து முடிசூடி, சகலரும் போற்றும் வண்ணம் அரசு புரிகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/19&oldid=1367839" இலிருந்து மீள்விக்கப்பட்டது