தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 73
விரிந்து வீழ் கூந்தல் பாரார்,
மேகலை அற்ற நோக்கார், சரிந்த பூம் துகில்கள் தாங்கார்,
இடை தடுமாறத் தாழார், நெருங்கினர்; நெருங்கிப் புக்கு,
'நீங்குமின்! நீங்குமின் என்று, அரும் கலம் அனைய மாதர்,
தேன் நுகர் அளியின் மொய்த்தார். (அரும் கலம் அணைய-அரிய ஆபரணங்களைப் போல் அழகு செய்யும். அளி- வண்டு) -
மாதர்க்ள், தம்மை இராமன்பால் இழுத்துக் கொண்டு தமக்கு முன்னாக ஒடும் மனத்தை எட்டிப் பிடிக்க விரும்புபவர் போல, விரைவாக ஒடி வருகின் றார்கள். - பள்ளத்துப் பாயும் நல்நீர் - அனையவர், பானல் பூத்த
வெள்ளத்தும் பெரிய கண்ணார்,
மென் சிலம்பு அலம்ப, மென் பூ தள்ள, தம் இடைகள் நோவ, -
தமை வலித்து அவன்பால் செல்லும் உள்ளத்தைப் பிடித்தும் என்ன
ஓடுகின்றாரும் ஒத்தார். - (பானல் - கருங்குவளை. வெள்ளம் - கடல். பூ - பூ போன்ற பாதம். வலித்து - இழுத்து)
இராமனது அவயவங்களில் ஒன்றைப் பார்த்தவர் கள் அந்த அவயவத்தின் அழகிலேயே மயங்கி நின்று