பக்கம்:சீனத்தின் குரல்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

3


தான் டாய்ஸ் என்ற மதத்தை ஸ்தாபித்த Leo-tsze லோ-ட்ஸி என்பவரை சந்தித்து மத ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபடுகிறார். எதிர்பாராமல் அந்த மாகாணத்தில் கலகம் ஏற்படவே வேறு மாகாணத்துக்கு ஓடிப்போய் அங்கு சில நண்பர்களை சேர்த்துக் கொள்ளுகின்றார். இப்படி ஓடும்போது வழியில் ஒரு பெண் அழுதுகொண்டிருப்பதைக் கண்டு அவளுடைய வரலாற்றை விசாரிக்கின்றார்.

புலி சம்பவம்

அந்தப் பெண் ஆராத்துயரத்திலாழ்த்து அழுது கொண்டிருப்பதைக்கண்ட கன்பூஷியஸ் காரணம் வினவ, நடந்ததைச் சொல்லத் தொடங்கி, தானும் தன் பெற்றோர்களும் அவ்வழியே வந்து கொண்டிருந்ததாகவும், ஒரு புலி முதலில் தன் தாயையும் பிறகு தன் தந்தையையும் கொன்றதாகவும், தான் எப்படியோ தப்பித்துக் கொண்டதாகவும் சோகத்தினிடையே சொல்லி முடித்தாள், இதைக்கேட்ட கன்பூஷியஸ், "இவ்வளவு பயங்கர நிகழ்ச்சிகளுக்குப் பிறகும் நீ ஏன் இங்கிருக்கின்றாய். உன்னையும் கொன்றுவிட்டால் என்ன செய்வாய், இதை, நீ சர்க்காருக்கு அறிவித்தாயா?", என்று கேட்கின்றார். "ஆம், அறிவித்தேன், சர்க்கார் என் விண்ணப்பத்தைக் கேட்கவில்லை. இவ்வளவு கொடிய மனம் படைத்த சர்க்காரைவிட இந்த புலி வாழும் காடே நன்றென நினைத்து இங்கே புலம்பிக் கொண்டிருக்கின்றேன்" என்று தன் பரிதாப