இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
92
சீனத்தின் குரல்
அன்பு பேசிய அந்த காலகவிகளுக்கு, இன்ப தந்த இந்த காலகவிகளுக்கு, இடையறாத துன்பத்திலாழந்த எம்மை எழுதுகோல் மூலம் தட்டி எழுப்பிய வரைகோல் வேந்தர்களுக்கு சிறைக் கம்பிகளைப் பிடித்துப் பிடித்து கைகள் குளிர்ச்சியடைந்த தியாகிகளுக்கு எமது நன்றி.
மகான் கன்பூஷியஸ், மட்டில்லாத சிந்தனையாளன் சன்யாட்சன், செயல் வீரர் மாசேதுங் வரை கோல் வேந்தர் லின்-யு-டாங் ஆகிய அனைவருக்குமே எமது மறக்காத நன்றி.
எங்கும், எப்போதும், எல்லோரும் வாழ்க என்பதே எங்கள் விருப்பம். இதுவே இன்றைய சீனத்தின் குரல்!