பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. விளையாட்டை விடத் தன்மானமே பெரியது ! வைமாரில் அமைச்சராகவும், பின்னர் பிரதமராகவும் பதவி வகித்த கதேயை, அறிவிலும் அழகிலும் செல்வத் திலும் சிறந்த திருமதி சார்லெட்பான் ஸ்டீன் என்பவர் தான் முழு மனிதனாக உருவாக்கினார் என்று கூறலாம். அந்த அம்மையாருக்கு 1,500-க்கு மேற்பட்ட கடிதங்கள் எழுதியவர் கதே. வைமார் குடியரசின் பிரதமராக விளங்கிய கதேவுக்கு எல்லா அறிவுத் திறன்களையும் அரசியல் நுட்பங்களையும் கலை உணர்வுகளையும் தெரிவிக்கவும் ஊக்குவிக்கவும் இந்த அம்மையாரே பல்லாண்டு காலம் உதவியுள்ளார். நான் இந்த அம்மையாரின் அரண்மனையை நேரில் சென்று பார்த்தபோது, சில சுவைமிக்க நிகழ்ச்சிகளைக் கூறினார்கள். (இந்த அரண்மனை வைமாருக்கு மூன்று மணிப் பயணத் தொலைவில் இருக்கிறது.) கதே இந்த அரண்மனையிலும், தன் வீட்டிலும் உள்ள ஒவ்வோர் அறையையும் ஒவ்வொரு வண்ணத்தில் அமைக்கச் செய்தார். வண்ணங்களுக்கும்; எண்ணங்களுக்கும் உள்ள பொருத்தத்தைப் பல்கலைச் செல்வராகிய கதே உணர்ந் திருந்ததே இதற்குக் காரணம்.