பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$49 கின்றேன்! என்னுடைய அன்பளிப்பாக வைத்துக் கொள் ளுங்கள்!” என்று சிறினேன். அப்புறம்தான் அவன் அடங்கினான். மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம்? 4. பாரிசில் சென்மில்" என்ற பாதாள இரயில் நிலை யத்தில் ஓர் அழகான - மிக அழகான பெண்மணி மிக நேர்த்தியான உடை உடுத்துக் கொண்டு வழியில் அமர்ந்து கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள். இரந்தும் உயிர் வாழ்பவர்கள் அங்கும் இருக்கத்தான் செய்கின்றார் கள். என்னுடன் வந்த நண்பர் இவ்வளவு அழகையும் இளமையையும் வைத்துக் கொண்டு அதுவும் Ljrrrferāāix இப்படிப் பிச்சை எடுத்தா வயிற்றைக் கழுவிக் கொள்ள வேண்டும் என்று பொடி வைத்தார். கற்பைப் பெரிதாகப் பேணுகிற சிறப்புக்காக அப்படிப் பிச்சை எடுப்பதும் தவறாய் எனக்குத் தோன்றவில்லை. அந்தப் பெண்ணை ஒளிப்படம் எடுக்க விரும்பியபோது அவள் அதற்கு அனுமதி மறுத்து விட்டாள்; உங்கள் நாட்டுப் பத்திரிக்கையில் எங்களைப் பற்றி எழுதி என் படத்தைப் போடுவதை - விரும்பவில்லை என்றாள். நாடும், நாட்டின் அவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது. ஆனால் - களில் சிலர் நம் நாட்டுப் பிச்சைக்காரர்களையும், அவர் களின் அவலங்களையும் படமெடுத்து வெளியில் அனுப்பு கிறார்களே! - : . . . . . .