பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 கற்ற பாடம். கருவிலேயே என்னிடம் அமைந்திருக்கக் கூடிய இந்தத் திரு மேற்குறித்த பெரியவர்களால் மேம் பட்டிருக்க வேண்டும். எனவே, என் துறையில் இருப்பவர் களிடம் விமான நிலையத்திற்கு வழியனுப்ப வரக்கூடாது என்று கட்டளை இட்டேன். ஆனால் அந்தக் கட்டளையை மீறி டாக்டர் பொற்கோ அவர்களும் டாக்டர் கு. மோகன ராசு அவர்களும் எழுத்தர் திரு. மா. பத்மநாபனும், திரு. சின், கோதில் ம்ொழியன் முதலிய ஆய்வு மாணவர் களும் விமான நிலையம் வந்தனர். பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் யார் தடுத்தாலும் வந்தே தீரும் அன்பினர்; எனவே அவரும் வந்திருந்தார். நள்ளிரவு விமானம் புறப்படும் வரை காத்திருந்தனர். யான் வீட்டிலிருந்து விமான நிலையம் செல்ல எனக்கும் என் மனைவிக்கும் தெரிந்த ஒரு குடும்பத்தினர் கார் கொடுத்து உதவினர். அவர்கள் தந்த அந்தக் காரிலேயே என்னை வழியனுப்ப வந்தவர்களைத் திருப்பியனுப்ப நள்ளிரவில் அது உதவியது. கார் கொடுத்த குடும்பம் விமான நிலையம் போகும்முன் என்னை அவர்கள் வீட்டிற்கு வரச்சொல்லி மாலையிட்டு வழியனுப்பியது. அதற்கு நன்றி பாராட்டும் வகையில் யான் என் உலகப் பயணத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்புமுன் அவர்கள் வீட்டிற்குப் போய் அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்துவிட்டே திரும்பி னேன். - விமான நிலையத்தில் யான் கண்ட காட்சி ஒன்று: என்னை வியப்பில் ஆழ்த்தியது; வேதனையையும் கிள்க் பியது. என் வளர்ப்புத் தந்தை திவான்பகதுர் டி. எம். நாராயணசாமிப் பிள்ளைக்கு மிகவும் வேண்டிய ஒரு கோயில் குருக்கள் வந்திகுந்தார். அவரையும் அவருடன் அமெரிக்காவுக்குப் பயணமாகிக் கொண்டிருந்த இன்னொரு