பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சீனப்பெண்மணி சிலமணித்துளிகளில் படம் எடுத்துக் கொண்டு என் மூலப் பிரதியை என்னிடமே தந்துவிட்டு, "இனி நீங்கள் போகலாம் என்றார். சற்றொப்ப ஒரு மணி நேரத்திற்கு என்னை விசாரணை செய்த அந்தச் சீனப் பெண்மணியின் முகத்தில் ஒருவித மெய்ப்பாடும் இல்லை. அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில் தைரியத் தில் அந்தப் பெண்மணியைப் பல கேள்விகள் கேட்க விரும்பினேன். பொதுவாகவே இத்தகைய ஆய்வுப் பயித்தியம் எனக்கு உண்டு. இரவெல்லாம் சரியாகத் துங்காத அயர்வாலும் சரக்குக் கூடத்தில் வந்திருக்கக் கூடிய பெட்டிகளை எடுத்துக் கொண்டு ஆங்காங்குள் புகுந்து கோலாலம்பூர் வழியே வந்திருக்கக் கூடிய தோழர்கள் திருவாளர்கள் நாகநாதன், சீனிவாசன், நடராசன் ஆகியோர்களைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத் துடிப்பாலும் சீனப் பெண்மணியை ஒரே ஒரு கேள்வி கேட்க மட்டுமே (மட்டுமேனும்) நேரம் இருந்தது ; கேட்டேன். என்னை ஏன் இவ்வளவு நேரம் விசாரித்தீர்கள் ? நீங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவர் அல்லவா ? அதனால் தான் : சீனப் பெண்ணின் பேச்சுத்திறன் என்னை ஒரு சில வினாடிகள் மூச்சுத்திறன் அ ற் ற வ ன் ஆக்கியது. மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் நன்றி என்று நகர்ந்தேன்.