பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சரி, இந்த ஈராயிரம் இப்போது நம் நினைவுக்கு வருவானேன் ? .ெ ப ா து வ க, ஈராயிரம்-சரியாகச் சொன்னால், 1800 ஆண்டுகட்கு முன்பு தோன்றிய நூல் 3rraig “àsvi/L15&srgo . Thousand eight hundred years ago என்ற முன்னோடி நூலை எழுதியவர் கனகசபைப் பிள்ளை என்ற தமிழறிஞர். இந்த ஆங்கில நூலை அண்மையில் சென்னைப் பல்கலைக் க ழ க நூற்றாண்டு வெள்ளி விழாவில் டாக்டர் பட்டச் சிறப்புப் பெற்ற பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் மொழி பெயர்த்துள்ளார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாக அது வெளி வந்துள்ளது. ஆராய்ச்சி அறிஞர் வி. கனகசபைப் பிள்ளை பற்றி இருபதாம் நூற்றாண்டுத் தமிழின் இமய வெற்றி வாகிய கலைக்களஞ்சியம் : சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் அறிவியல்-மாவடை (Zoolgy) கருத்தரங்கிற்குச் சென்று வந்த என் மகள் டாக்டர் திருமதி ச. எழிலரசி பாலசுப்பிர மணியன் அவர்கள், சிங்கப்பூரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருக்கும் தமிழர்கள் கூடத் தங்கள் வீடுகளில் Encyclopaedia Brittarica தொகுதிகள் முழுவதையும் வைத்திருப்பதையும் தமிழ்க் கலைக்களஞ்சியத் தொகுதிகளையும் உடன் வைத் திருப்பதையும் அதில் எவரிடமேனும் உள்ளவற்றில் சில குறைந்தால் எவ்வளவு விலை கொடுத்தும் வாங்கத் துடிப் பதையும் குறிப்பிட்டபோது அக்கரைக்குப் போன-அலை. கடலுக்கு அப்பால் போன-தமிழர்கட்கேனும் அக்கறையும் கலை ஆர்வமும் தமிழார்வமும் இருப்பதை எண்ணி மெய் சிலிர்த்துப் போனேன். தமிழகத்தில் அப்படி ஒரு நிலை பொதுவுடைமை ஆட்சி வந்தேனும் வராதா என்று ஏங்கினேன்) தரும் இரத்தினச் சுருக்க விவரம் வருமாறு : கனகசபைப் பிள்ளை, வி. (1855-1906) ஆங்கில மும் தமிழும் அறிந்த அறிஞர். இவர் தந்தை விசுவநாதப் பிள்ளை , யாழ்ப்பாணத்து மல்லாகம் என்னும் ஊரினர் ; வின்ஸ்லோ பாதிரியார் தமிழ் அகராதிக்கு உதவி புரிந்தவர். கனகசபைப்