108 சீர்திருத்தச் செம்மல்
அச்சமின்மை
பிறிதொரு சமயம் பங்காளி வீட்டுத் திருமணத்திற்காக உறவினரு டன் இராயவரத்திற்குச் சென்றிருந்தார். நிகழ்ச்சிகள் முடிந்து திரும்பும் பொழுது இருட்டி விட்டது. மண வீட்டார் தடுத்தும் இவர் கேட்கவில்லை. மாட்டு வண்டிகளில் வந்து கொண்டிருந் தனர். இரவு 11 மணி.
நடுவழியில் திருடர் சிலர், வண்டியை வழிமறித்தனர். பெண்கள் அஞ்சி நடுங்கிக் கூக்குரலிட்டனர். சண்முகனார் சிறிதும் அஞ்சில ராகிக் கைத்துப்பாக்கியை யெடுத்து வானை நோக்கிச் சுட்டு விட்டு, 'உயிர் பிழைக்க வேண்டுமானால் ஓடி விடுங்கள்; இல்லை யென்றால் தீர்த்துவிடுவேன்' என்றார். திருடர்கள் மூலைக்கொருவராக ஓடி விட்டனர்.
எதையும் தாங்கும் இதயம்
1927 ஆம் ஆண்டு காந்தியடிகள் செட்டி நாட்டிற்கு வந்திருந்த பொழுது இன்பமாளிகையில் தான் தங்கியிருந்தார். அவருடன்கஸ்தூரிபாய், தேவதாசு காந்தி, இராசகோபாலாச் சாரியார் முதலான பெருமக்களும் வந்திருந்தனர். உணவு முதல் எல்லா ஏற்பாடுகளும் இங்கேதான்.
செட்டி நாட்டிலுள்ள ஊர்களுக்குச் சென்று கூட்டத்திற் பேசி விட்டு, நன்கொடையாகக் கிடைத்த தொகை. ஏலத்திற் கிடைத்த தொகை, கூட்டத்தில் உண்டியல் மூலங் கிடைத்த தொகை அனைத் தையும் கொணர்ந்து, இன்ப மாளிகைக்கு வந்து தான் எண்ணுவர்.
காந்தியடிகள் தொடர்பால், சண்முகனார் தாம் வைத்திருந்த மேல் நாட்டுத் துணிகளையெல்லாம் எரித்து