பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/126

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

116


3.அடுத்தவர்க்கு நிழலாவார் அன்னையினும் தயவுடையார் ஆண்மை யாளர் மிடுக்கான தோற்றத்தார் கதராடை மேனியினார் அன்பு தோய்ந்த துடுக்கான பேச்சாளர் தூயகலை வல்லார்க்கு வாரி வாரிக் கொடுக்கின்ற கரதலத்தார் வை.ச.சண் முகனாரின் குறிப்புக் காண்பீர்.

4.மேனாடும் போற்றிடும் கானாடு காத்தநகர் மேவுமுயர் தியாக சீலன் தேனோடு செந்தமிழ் சீரோடு வாழ்ந்திடச் சேவையாற் சிறந்த செம்மல் மாநாடு மேம்படச் சமுதாயம் ஓங்கிட மகத்தான பணிகள் ஆற்றி வானாடு வாழ்ந்திடும் வை.சு.ச. பேர்புகழ் உலகெலாம் பரவி வாழ்க.