வை. சு. சண்முகனார் 131
முல்லைப் பதிப்பகத்தைத் தொடங்கி, பாவேந்த நூல்களை நான் வெளியிட்டுக் கொண்டிருந்த காலத்தில் 'இன்ப மாளிகை'யில் பாவேந்தரும் வை.சு.வும் உரையாடிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது, 'தமிழில் பிறமொழிக் கலப்பு ஏன்?' என்ற பிரச்னையை வை. சு. எழுப்பினார்கள்.
அன்று இரவே, 'தமிழ் இயக்கம்' என்ற பாடல்களை இயற்றினார் பாவேந்தர்.
மறுநாள் காலையில், என்னிடம் கொடுத்து, "உடனே இதை அச்சிட்டு வெளியிடு" என்றார் பாவேந்தர் (அப்படியே வெளியிட்டேன்.)
அப்பொழுது அருகில் இருந்த வை.சு. அவர்கள், "எதையும் அழகாக அச்சிட்டு, வெளிப்படுத்துவதில் முத்தையாவுக்குத் தணியாத ஆர்வம் உண்டு" என்று கூறினார்கள்.
அவர்கள் அன்று கூறியது, தீர்க்கதரிசியின் சொல்லாகவே அமைந்தது.
(இன்று வரை 16 பக்கங்களிலிருந்து 1000 பக்கங்கள் வரை 370 அச்சிட்டிருக்கிறேனே!)
ஒரு சமயம், "தம்பி! உன் தேதி இல்லாக் கடிதம் வந்தது" என்று வை.சு. எழுதி இருந்தார். (கடிதத்தில் தேதி குறிப்பிடாததைச் சுட்டிக் காட்டினார்கள்.)
இன்றும் கடிதத்தில் தேதி குறிப்பிடும் போது எனக்கு வை.சு.வின் நினைவு எழும்.
வை.சு. அவர்கள் சத்திய சீலர் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டு.