இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
14 எங்கள் வழிகாட்டி
சோ. இராசா சண்முகம்
(சண்முகனாரின் மகன் வழிப் பேரன் இராசா சண்முகம், தம் பாட்டனாரின் பண்பாடுகளைச் சுட்டிக் காட்டி, ஐயா பேரப் பிள்ளை களை எவ்வாறு வழி நடத்திச் சென்றார் என்பதையும் உளமுருகி எடுத்துக் காட்டுகிறார்.)
தலைவர்கள் தொடர்பு
'தாழ்வுற்று வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த' அண்ணல் காந்தியடிகள்.
தியாக வேள்வியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட - இரும்பு மனிதராகத் திகழ்ந்த வ.வே. சுப்பிரமணிய ஐயர்,
எத்துணைத் தொல்லைகள் துன்பங்கள் தொடரினும் கொஞ்சமும் அஞ்சாது, தேசபக்தியை நாடு முழுதும் கொழுந்து விட்டெரியச் செய்த தீர்க்கதரிசி மகாகவி பாரதி.
'நாயினுங் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார் நலிவதை நான் கண்டு ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி