15 "வைராக்கியம் படைத்த வை.சு. சண்முகனார்"
எஸ்பி. முத்துராமன்
(திரைப்பட இயக்குநர் சுப. முத்துராமன், தம் மனைவி கமலாவின் பாட்டனார் பற்றிப் படம் பிடித்துக் காட்டுகிறார்.)
அய்யா வை. சு. சண்முகம் அவர்களைப் பற்றி நினைவு நூல் வெளியிடுவதறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.
அவர்களின் வாழ்க்கை நம் அனைவருக்கும் பாடமாகும். இக்கால இளைஞர்கள் அவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டால் ஒரு தைரியமே வரும்.
"இன்ப மாளிகை" என்று தன் வீட்டிற்குப் பெயர் வைத் தார்கள். அங்கு வராத தலைவர்களே இல்லை. மகாத்மா காந்தி யார், பாரதியார், பாரதிதாசன், வ.வே. சு. ஐயர் அனைவரும் இன்ப மாளிகையின் விருந்தினர்கள். வழக்கு ஒன்றின் காரண மாக அந்த மாளிகையை விட்டு வெளியே சென்று, ஒரு சிறிய வீட்டில் வாழ நேர்ந்தபோதும் இன்பமாகவே வாழ்ந்தார்கள்.
அவர்களின் மகனார் சோலை அவர்கள் (என் மாமனார்) மூன்று தலைமுறை வழக்கை எடுத்துக்