பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/167

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 157

எண்ணி மிக மிகக் குலுங்கி அழ, அந்த நிலையிலும் கண்ணில் நீரைக் காட்டாமல், எங்களைக் கப்பலேற்றியவுடன், எங்கள் ஆயாவுடன் நின்று கொண்டு கைகளை இருவரும் அசைக்க, நாங்கள் கப்பலின் மேல்தளத்தில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கையை அசைக்க, பின்னர்க் கப்பல் மிதக்க ஆரம்பித்த நேரத்தில், கலங்காத எங்கள் தெய்வம் ஐயா அவர்கள் கண்களைத் துடைத்துக் கொண்டு கையை ஆட்டி விடை கொடுத்த காட்சி, கடைசிக் கட்டமாகவும் என் வாழ்வின் துக்கத்தின் முதல் கட்டமாகவும் அமைந்து விட்டது.

அதன்பின் தாய்நாடு வந்தபோது எங்கள் ஆயாவைத் தனி மரமாகப் பார்த்துத் தவித்தோம். அந்தச் சாதாரண வீட்டில் எங்கள் தெய்வத்தின் மறைவுக்கு வந்த (அப்nது தமிழ் நாட்டின் முதல்வராக இருந்த) அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் திராவிட கழகத் தூண்களில் ஒன்று சரிந்து விட்ட தாகக் கூறியதை ஆயா எங்களிடம் சொன்னார்கள். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாகவும், பேரைச் சொன்னால் ஊர் தெரியணும் என்பதற்கு எடுத்துக் காட்டாகவும் வாழ்ந்தவர்கள் எங்கள் ஐயா.