பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/170

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

160 சீர்திருத்தச் செம்மல்.

ஏற்படும் சச்சரவுகள், பிரிவுகள், கருத்து வேறுபாடுகள் இவைகளில் பாதிக்கப் பட்டவர், ஐயா அவர்களின் உதவியை நாடுவதும் வீட்டில் பஞ்சாயத்து செய்து, பிரச்சினைகளை சுமூகமாக ஆனால் ஆணித்தரமாகத் தீர்த்து வைப்பதும் அன்றாட நிகழ்ச்சிகளாக நடக்கும். ஐயா அவர்களின் மன உறுதி, விவேகம், உண்மைக்குப் போராடும் மன வலிமை எவரையும் அயர வைக்கும். இதை எண்ணற்ற நிகழ்ச்சி களில் கண்டுள்ளேன். மூட நம்பிக்கை ஐயா அவர்கட்கு ஒத்து வராத ஒன்று. அதை எதிர்க்க, ஒழிக்க ஐயா அவர்கள் எடுத்த முயற்சிகள், சமாளித்த எதிர்ப்புகள் ஏராளம். ஐயா அவர்கள் பள்ளியில் நான் கற்றவை, உணர்ந்தவைதான் எனது பள்ளிப் படிப்பு, கல்லூரி உயர் கல்விப் படிப்பு, எனது பலதரப்பட்ட பணிகள் அனைத்திற்கும் ஆழமான அடித்தளமாக அமைந்தன.

ஐயா அவர்களின் கூர்மையான புத்தி, புத்திசாலிகளையே தூக்கி விழுங்கக்கூடியது. மோசடி பண்ணியவர்களை, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களை, போலிப்ப கட்டு வரட்டு கவுரவம் பார்ப்பவர்களை, எந்த விதமான தவறு செய்பவர்களையும் நேரடியாக அவர்கள் உணரும் வண்ணம் தவற்றைச் சுட்டிக் காட்டுவார்கள். இதனால் ஐயா அவர்கள் பலரது வெறுப்பினையும் பகையினையும் தேடிக் கொள்ள நேர்ந்தது. அதற்காக ஐயா அவர்கள் என்றும் மனந்தளர்ந்ததே கிடையாது. நேர்மைக்காகவும்,உண்மைக்காகவும் அந்த உயர்ந்த உள்ளம் போராடி, இலட்சியத் திற்கு என்றும் வெற்றியைக் குவித்தது. பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டு, மோசடிக் கும்பலினால் வழக்கு விவகாரப் புதை மணலில் சிக்கி, உடல்