பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/183

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 173

வளர்ச்சி முன்னேற்றத்துக்கு ஒரு வழி காட்டியாக, உறுதுணையாகத் தந்தையாரவர்கள் இருந்திருக் கிறார்கள். அந்த நன்றியை அவர் ஒரு போதும் மறந்ததில்லை. ஒரு தம்பி அல்லது மகனைப் போலத் தந்தையாரவர்களிடம் நடந்து கொள்ளுவார்கள்.

தந்தையாருக்குப் பொருள் மெலிவு ஏற்பட்டு விட்டது. ஒரு சமயம் கேசுக்கு அவசரமாகப் பணம் தேவைப்பட்டாதாம். நிலை மையைத் தந்தையாரவர்கள் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார்கள். தந்தையாரவர்களே எதிர்பாராவிதம் தந்தி மணியார்டரில் சில ஆயிரம் அனுப்பி வைத்து விட்டு, சிறிதுநாளில் மேற்கொண்டு பணம் அனுப்பி வைக்கிறேன் என்று எழுதி, அதன்படி அவர்களின் மனைவியின் நகைகளை (அவர் சீனப் பெண்மணி) பேங்கில் அடமானம் வைத்து மறுபடியும் பணம் டிராப்ட் மூலம் கிடைக்கச் செய்தார்கள். பிறகு இந்தப் பணங்களை என் அண்ணன் சிங்கப்பூரில் கொடுத்து விட்டார்கள். தந்தையாரவர்களின் பிள்ளைகள் என்பதினால் எனது அண்ணன் அவர்களிடமும் என்னிடமும் அளவற்ற பிரியத் துடன் நடந்து கொள்வார்கள்.

தந்தையாரவர்கள் இறந்த பின்னரும் எனக்கும், என் அண்ணனவர் கட்கும் ஒரு தந்தைபோல (நாங்கள் சிங்கப்பூரில் இருந்த பொழுது) பலமாகவும், உறுதணையாகவும் இருந்து வந்தார்கள். அவர்களின் மறைவுக்குப் பிறகு அவர்களின் அருமைத் துணைவியாரும் என்னிடம் (அண்ணன் அவர்கள் காலமாகி விட்டார்கள்) அவர்கள் உயிருடன் இருந்தவரை நல்ல அன்பு, ஆதரவுடன் இருந்துவந்தார்கள், அந்தக் காலத்தில் சிங்கப்பூரில், மலேசியாவில் தமிழர்களின் நலன், வளர்ச்சிக் காக, "முன்னேற்றம்" பத்திரிகை மூலமும், "தமிழ் முரசு"