இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
1 குடிப்பிறப்பு
செட்டிநாடு
கலைக்கோவில் பல எழுப்பிக் கல்வியறிவு செழித்தோங்கச் செய்துவரும் நாடு.
கடவுட் கோவில்களும் கணக்கின்றிக் கட்டுவித்துப் பக்தியுணர்வைப் பரப்பிவரும் நாடு.
இலக்கியங்களிற் பேசப்படும் பண்டைத் தமிழ் நாகரிகம் பட்டுப்போகாது, இன்றும் தளிர் விட்டு, அரும்பு விட்டு மணம் பரப்பிக் கொண்டிருக்கும் மாண்புடைய நாடு.
அயல் நாகரிகங்களையும் ஆவலோடு தமதாக்கிக் கொண்டு, அப்படியே ஆரத் தழுவி அகங்குளிரும் நாடு.
பதிப்பகங்கள் பல நிறுவிப் பயனும் நயனும் தரத்தக்க பண்பட்ட நூல்களை வெளியிட்டு, நாடுயரத் தொண்டு செய்யும் நாகரிகப் புதுமை சேரும் நாடு.
தொடங்குவது எதுவாகினும் பஞ்சாங்கத்தின் துணை யோடு நாள் பார்த்துக் கோள் பார்த்து நாடித் தொழில் செய்யும் பழைமை கூறும் நாடு.சீ.-2