பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/53

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4 யாவருங் கேளிர்

விரிந்த மனம்

பொதுவாக நகரத்தார், சாதிக் கட்டுப்பாடு மிகுதியாகக் கொண்ட வர்கள். அக்காலம் சாதிக் கட்டுப்பாடு தலைதூக்கி நின்ற காலம். அவர்களுக்குள் கூடிப் பேசிச் சில கட்டுப்பாடு களை வகுத்துக் கொள்வர். அக்கட்டுப்பாடுகளிலிருந்து அணுவளவும் பிறழ மாட்டார்கள். ஒரு வேளை பிறழ நேரிட்டால் விலக்கி வைத்து விடுவர். அவ்வளவு கட்டுக் கோப்பாக வாழும் இயல்பினர் நகரத்தார் எனப்படுவோர்.

மு.சின்னையா செட்டியார், சொ. முருகப்பனார், இராம. சுப்பையா, வயி.சு.சண்முகனார் போன்றவர்கள் முற்போக் கெண்ண முடையவர்கள் ஆதலின் சில கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து விட்டுத் தலைநிமிர்ந்திருப்பர். அதனால் அவர்கள் பெருந் தொல்லை களுக்கெல்லாம் ஆட்பட்டதும் உண்டு. அவற்றைக் கண்டு அவர்கள் அஞ்சாது நின்று, சமுதாயச் சீர்திருத்தப் பணியில் தொடர்ந்து, பணியாற்றி வந்தனர்.

இவ்வாறு சீர்திருத்தப் பணியில் பேரீடுபாடு கொண்டிருந் தமையால் நம் சண்முகனார் சாதி வேறுபாடு