வை. சு. சண்முகனார் 45
வை. சு. சண்முகனார் 45 கருதினார். இத்திருமணத்துக்கு இராம. சுப்பிரமணியம் என்னும் இளைஞர் உடன்பட்டார். உடனே இவ்வெண்ணம் பெரியார் ஈ. வே. ரா. அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பெரியார் இசை வுடன் பெண்ணின் தந்தையாருக்கும் இக்கருத்துத் தெரிவிக்கப்பட்டது. சில நாள் சி ந் தி த் து அவரும் ஒப்புதல் அளித்து விட்டார். "இக் கலப்பு மனத்தால் மணமகன் இராம. சுப்பிரமணியத்துக்குப் பல தாங்க முடியாத இடஞ்சல்களும் எதிர்ப்புகளும் சுற்றத் தார்களாலும் சாதிப் பற்றுடையோர்களாலும் பெரும் அளவில் ஏற்படும் என்பதை முன் கூட்டியே நன்கு தெரிந்ததனால் திரு. சொ. முருகப்பாவும் மற்ற சீர்திருத்த இளைஞர்களும் ஆலோசித்து, ஒரு பாதுகாப்புக்குழு ஏற்படுத்தி னார்கள். அவர்கள் தீவிரவாதிகளாகவும் அஞ்சா நெஞ்சம் படைத்தவர்களாகவும் உணர்ச்சி மிக்கவர்களாகவும் இருந்தனர்' -எஸ். ஏ. கே. கே. ராஜா (நீலாவதி இராம. சுப்பிரமணியன் வாழ்க்கை வரலாறு) அப்பாதுகாப்புக் குழுவில் 'கானாடு காத்தான் வயி. சு. சண்முகம் ஒருவர். யாரோ நடத்தும் கலப்பு மணத்துக்கு இவர் ஏன் பாதுகாப்புக் குழுவில் பங்கு கொள்ள வேண்டும்? முற்போக்கு முயற்சிகளில்- கலப்பு மணம் பரவ வேண்டுமென்ற ஆர்வத்தில் எ வர் ஈடுபடினும் அவரெல்லாம் கேளிரே எனக் கொண்டு வாழ்ந்தவராதலின், பாதுகாப்புக் குழுவில் போர் மறவராக அவர் விளங்கினார்.