பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 எனத் தம் விழைவை என்னிடம் ஒரு நாள் வெளிப் படுத்தினார் தமக்கையார். என்னால் உடன்படவும் இயலவில்லை; மறுக்கவும் இயலவில்லை, 1949ஆம் ஆண்டிற்குப் பின்னரே சண்முகனாரின் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. ஆதலின் முழுமையாக அவர் வரலாறு தெரியாமல் எவ்வாறு எழுத உடன்படுவது? குடும்ப உறவு பூண்டு ஒழுகி வரும் நான் எவ்வாறு மறுப்பது? இருகன்றினுக் கிரங்கும் ஆவின் நிலை பெற்றேன். ஒருவாறு துணிந்தேன். இசைந்தேன். குறிப்புகள் தேடினேன். அறிஞர் பெருமக்கள் எழுதி வைத்த நூல்களிற் சில குறிப்புகள் கிடைத்தன. ஆண்டு மலர் களிற் சில செய்திகள் கிடைத்தன. அவற்றை அடிப்படை யாகக் கொண்டும் நானறிந்த செய்திகளைக் கொண்டும் எழுதத் தொடங்கினேன். பார்வதி அம்மையார் வாயிலாகச் சண்முகனாரின் வாழ்க்கைக் குறிப்புகளைக் கேட்டறிந்து எழுதினால், பயனுடையதாக இருக்குமே'யென்று பாவலர்மணி புலவர் ஆ. பழநி ஒர் அறிவுரை கூறினார். இதுவும் நன்றேயென எண்ணித் தமக்கையாரை அணுகினேன். அவரும் இசைந்து, தமது எழுபதாவது அகவையிலும் உடல் நலங்குன்றியிருப்பினும் மெல்ல மெல்ல, நினைந்து நினைந்து, பல குறிப்புகளை வழங்கி னார்கள். மேற்குறித்த செய்திகளைக் கருவாகக் கொண்டு, விரிவாக்கி, இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சண்முகனார் காலத்துச் சான்றோர்களை அணுகிக் கட்டுரை பெறலாமென விரும்பி முயன்றோம். ஆனால் அவர் காலத்துப் பெருமக்களில் மிகச் சிலரே இன்று. வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.