பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

64. க் காணிக்கை நிலவுரிமைக் கிராம கரைமணியம்பள் வரிவெள்ளைக்கு
65. டைவரி சுங்கத்தில் சேந்த ஆயக்கட்டுக்கும் வரிகாதவரியெப்
66. பேர்பட்ட பலவரியும் சறுவமானியமாக ஆசந்திராற் மாற்
67. கமாக நம்முட புத்திரபவுத்திரம் பாரம்பரியமாகவும்
68. தங்கள் சீஷ பாரம்பரியமாகவும் காசியில் விசுவேசுவரசுவா
69. மி விசாலாட்சியம்மன் அபிஷேக நைவேதனம் கெங்கா தீரத்தி
70 ல் அன்னதான தர்மத்துக்கும் இந்த இரண்டு கிறாமமும் காரா
71. தான பூறுவமாக தாம்பிர ஸாதன பட்டையம் எழுதிக்கொ
72. டுத்தபடியினாலே ஆண்டனுபவித்து கொள்ளுவாராகவும்
73. யித் தற்ம்மத்துக்கு யிதம் பண்ணினவர்கள் காசியிலே கோடி
74. சிவ பிரதிஷ்ட்டை கோடி விஷ்ணு பிறதிஷ்ட்டையும் புண்ணிய
75. த்தையுடையவராகவும் பியதற்க்கு யாதாமொருவன் அகித
76. ம் பண்ணினவன் காசியிலேயும் ராமீசுபரத்திலேயும் கோ
77. டி காரம்பசுவை கோடி பிராமனாளையும் கொன்றபா
78. வத்தையடைவாராகவும் யிந்தபடிக்கு குமரகுருபரத்தம்பி
79. ரானவர்களுக்கு விசைய ரெகுனாத பெரிய உடையாத் வே
80. ரவர்கள் யிந்தப்படி தற்ம சாதனைப்பட்டையம் எழுதிக்கெ
81. டுத்தோம் ராயசம் சொக்கப்பிள்ளை குமாரன் தற்மராயபிள்ளை
82. கை எழுத்துப்படிக்கு யிந்த தாம்பிர சாதனம் எழுதினேன்
83. சிவகங்கையிலிருக்கும் தையல்பாகம் ஆசாரி குமா
84. ரன் ஆறுமுகம் வைத்தாத்வி குணம் புண்யம் பரத
85. த்தாறு பாலனம் பரதத்தாப ஹாரேன ஸ்வத
86. த்தம் நிஷ்பலம் பலேது வெவத்தாம் பரதத்தாம்
87. வாயோ ஹரேத் வசுந்தராம் ஷ்ஷ்டி வர்ஷ
88. சகஸ்ராணி விஷ்ட்டாயாம் ஜாயதே கிரி
89. மி ஏதஸ்மிந் ரக்ஷிதே ஐந்தெள யத்ர க
90. ஸ்யாம் வயதத்தம் த்ரைலோக்ய ரட்சணா
91. த் புண்யம் யத்ஸ்யாதகஸ்யாந் நசம்
92. சய, சிவசகாயம். உ

2. திருப்பனந்தாள் செப்பேடு


இந்தச் செப்பேடும் திருப்பனந்தாள் பண்டார சன்னிதிகளிடம் கி.பி.1782 ஒச்சம்தட்டு ஆணையர் கோட்டை ஆகிய ஊர்களை தானம் வழங்கியதைக் குறிப்பிடுகிறது. காசி மடத்து அன்னதானம் கட்டளையை திறம்பட நடத்துவதற்கு வழங்கி இருப்பவர் விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவர் அவர்கள். ராணி வேலு நாச்சியாரது மருகர்.

1. ஸ்ரீகாசி விசுவேசுவர
2. ன்னபூரணி ஸ்காயம்
3. ஸ்வஸ்திஸ்ரீமன் மகாமண்டலேசுவரன் அரி