பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 151

செய்த்தலை மாவ

75. டை மரவடை மேல்நோக்கிய மரம் கீள்நோக்கிய கிணறு பாசிபடுகை
76. ஆற்றுக்கால் ஊத்துக்கால் நிதி நிசேஷது ஜெயதரு பாஷனக்ஷ 77. ணியாகாம்ய சித்த சாத்தியமென்று சொல்லச் செய்த அஷ்ட்ட போக
78. தேஜ சுவாமி
79. யங்களிம் ம
80. டம் தண்ணீ 81. ர் பந்தல் நந்தவனம் பணிவிடைளுக்கு கிறாமம் ஆக தானா சா
82. சனம் பண்ணிக் கொடுத்ததுனாலே ஆச்சந்திராற்கத் தாயி ஆக சந்திர
83. ரதித்தவரை சந்திராதித் தம் பிரவேசமுள்ளவரைக்கும் புத்திராபவுத்
84. திர பாரம்பரையாக ஆச்சந்திரார்க்கமாக ஆண்டனுபவித்துக் கொள்
85. வாராகவும் யிந்த தற்மத்தை யாராமொருத்தர் பரிபாலனம் பண்ணின பே
86. ற்க்கு காசிலேயும் கெங்கைக் கரையிலேயும் ராமேசுபரந்தனுக்
87. காடியிலேயும் கோடி சிவலிங்கப் பிறதிஷ்ட்டையும் கோடி வி
88. றும்மப் பிரதிஷ்ட்டையும் கோடி விஷட்டுணு பிரதிஷ்டையும் கே
89. ரடி கோதானமும் பூதானம் கன்னிகா தானமும் பண்ணின பல
90. னையடைவாராகவும் யிந்த தற்மத்துக்கு யாதாமொருத்தர் அகிதம்
91. பண்ணின பேர்கள் காசியிலேயும் ராமேசுபரந்தனுக்கோ
92. டியிலேயும் கெங்கைக் கரையிலேயும் கோடி விறுமகத்தியு
93. ம் மாதா பிதாவையும் அனேகங்கோடி காறாம் பசுவை
94. யும் கொன்ற தோஷங்களிப் போகக் கடவராகவும் உ

8. காளத்தி ஏந்தல் செப்பேடு

மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவர் அவர்கள் கி.பி.1767-ல் திருவாவடுதுறை பண்டாரசன்னதியில் அம்பலவாணசுவாமி பூஜைக்கும் மகேஸ்வர பூஜைக்குமாக சிவகெங்கைச் சீமையில் உள்ள காளத்தி ஏந்தல் என்ற ஊரினை சர்வமான்யமாக வழங்கியதை குறிப்பிடுவது இந்த செப்பேடு)

1. சுவத்தி ஸ்ரீமன் மகாமண்டலேசுபரன் அரியராயிர தள
2. விபாடன் பாசைக்குத் தப்புவராயிர கண்டன் மூவராயி
3. ர கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொ
4. டாதான் பாண்டிய மண்டல தாபனாச் சாரியன் சோளமண்
5. டல பிரதிட்ட பாணாசாரியன் தொண்ட மண்டல சண்டப்பி
6. ரசண்டன் ஈளமும் கொங்கும் யாள்ப்பானமும் எம்மண்டலமு
7. மழித்துக் கெசவேட்டை கொண்டருளிய ராசாதி ராசன்
8. ராச பரமேசுரன் ராசமார்த்தாண்டன் ராசகுல திலகன் ராய
9. ராகுத்த மிண்டன் மன்னரில் மன்னன் மருவலர் கேசரி
10. துட்டரில் துட்டன் துட்டநிட்டுரன் சிட்ட பரிபாலனன்
11. ஒட்டியர் மோகந்தவிழ்த்தான் துலுக்கர் தள