பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 169

53. புத்து புனல் இது முதலான உலக ஆஸத் ஆதாயமு
54. ம் அங்க சுங்கம் வெள்ளைக்குடை கீதாரம் கரை
55. மணியமங்களம் பட்டயவரி மடத்துவரிச்சுக்கல்வரி 56..... ... .... சருகனி கோவில் தீபதூப நெய்வேத்
57. தீயம் ஆராதனைக்கு நிற்சேப தானம் பண்
58. ணிக் குடுத்தபடியினாலே இந்தப்படிக்கு சந்தி
59. ராதித்த சந்திர பிரவேசுவரைக்கும் கல்லு
60. ங் காவேரியும் புல்லும் பூமியும் உள்ளவரை
61. க்கும் ஆண்டனுபவித்துக் கொள்வாராகவும்
62. இந்த தர்மத்தை மேன் மேலும் பரிபாலினம்
63. பண்ணின பேருக்கு ஆயிரங்கோடி கண்ணியா
64. தானமும் ஆயிரங்கோடி லெட்சபிராமண போ
65. சனம் பண்ணி லெட்சந் தேவாலயத்தில் கற்ப
66. கோடி திருவிளக்கு ஏத்தும் பலனு மடைவா
67. ராகவும் இந்த தர்மத்துக்கு யாதொருவன்
68. அம்சளிவு பண்ணினால் கங்கைக் கரையில்
69. காராம் பசுவை மாதாவை குருவை களுத்தறு
70. த்த தோசத்தில் போவாராகவும்.

2. சிவகங்கை மொட்டை பக்கீர் தர்கா செப்பேடு

சிவகெங்கை நகரின் தென்பகுதி அகிலாண்ட ஈஸ்வரிபுரத்தில் வாழ்ந்திருந்த இஸ்லாமிய புனிதரான மொட்டைப் பக்கீர் சாயுபு என்பவருக்கு சிவகெங்கையின் முதலாவது ஜமீன்தார் படமாத்தூர் கெளரிவல்லபத் தேவர் அவர்கள் பொன்னான்குளம் மாகணம் உடையாரேத்தல் திரணி கிராமத்திலும், மங்களம் தாமுக இத்துக்குடி மாகணம் நாளிவயல் கிராமத்திலும் நஞ்சை புஞ்சை நிலங்களை சர்வ மாணியமாக வழங்கி சிறப்பித்ததை இந்த செப்பேடு தெரிவிக்கின்றது. இந்த செப்பேட்டின் காலம் சரியாக கணக்கிடப்பட்டு குறிக்கப்படவில்லை.

1. உ சாலிவாகன சகார்த்தம் 1765 கலியத்
2. தம் 4765க்கு மேல் செல்லாநின்ற சோ
3. பகிறுதுஸ்ரீ சித்திரை 5தீ ஸ்ரீமது விசை
4. யரகுநாதச சிவன்னப் பெரிய உடையாத் தே
5. வரவர்கள் முத்துவடுகனாதத் தேவரவர்கள்
6. சிவகங்கையிலிருந்து மொட்டைபக்கிரி
7. சாயபுக்கு பொன்னாகுள மாகாணத்தில் உடை
8. யானெந்தல் திரணிஉள்பட விரையடி 60
9. ளம் மங்கலந் தாலுகாவில் இத்திக்குடி மா
10. காணத்தில் நாளிவயல் கிராமம் கலவிரை
11. யடி 40ளம் ஆக கிராமம் - உகு விரையடி - 10:ளசூ
12. தற்ம பூசாதனம் சறுவமானியமாகப்பண்