டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 201
மருதிருவர் விளித்துச் சொல்வதாக வருமிடங்களில்
“எந்தாயே இவ்விடத்தில் இனி இருக்கப் போகாது" (பக்கம் 130)
“வருந்தாமல் மாதாவே மறைபாதம் நோகாமல்...” (பக்கம் 132)
“தன்னை. தனியிருத்தி தாயே போய் வாரோமென்று...” (பக்கம் 139)
“அருகே சிவிகை தன்னை அடுத்து இருவர் எந்தாயே....” (பக்கம் 156)
“தேவியுடைச் சேவகராய்ச் சென்று இருந்து நாங்களுமே
வந்தோம் பழையபடி மாநிலத்தை ஆளவைத்து
எந்தாய் வளந்தேறி இருக்க வென்று...” (பக்கம் 157)
மருது சகோதரரர்கள், ராணி வேலுநாச்சியாரை, தாயாகவே மதித்துப் பணிந்து சொல்வதாகப் பாடும் நூலாசிரியர், ராணியாரும் மருது சகோதரர்களும் சிவகங்கையை விட்டு, திண்டுக்கல் சீமையில் சீப்பாலக் கோட்டையில் ஒராண்டு தங்கியிருந்ததைக் குறிப்பிடும் பொழுது,
"நாட்டியர்மனையும் நலமாகவே அமைத்து
வீற்றிருந்தார் மன்னர் மெய்மகிழ்ந்து ராணியுடன்...” (பக்கம் 139)
என்று குறிப்பிட்டுள்ளார். "மெய்மகிழ்ந்து வாழ்ந்தனர் என்ற குறிப்பை அம்மானை ஆசிரியர் எத்தகைய உள்ளக் குறிப்புடன் பயன்படுத்தினார் என்று இப்பொழுது நம்மால் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆனால், பிந்தைய கால நூலாசிரியர்கள் இந்த தொடருக்குப் பொருத்தமான பொருளைக் கொள்ளவில்லை என்பது அவர்கள் எழுத்துக்களில் இருந்து தெரிய வருகிறது.
இந்த அம்மானை, சிவகங்கை பற்றிய நூல்களில் மிகவும் பழமையானதால் (கி.பி.1840), பின்னர் சிவகங்கை பற்றி எழுதிய நூலாசிரியர்களும், இந்தத் தொடரினால் பாதிக்கப்பட்டவர்களாக, மருதிருவருக்கும் வேலுநாச்சியாருக்குமிடையில் உள்ள தொடர்புக்கு மாசு கற்பிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டனர் என்பதை அவர்களது எழுத்துக்கள் தெரிவிக்கின்றன. இன்றைய நூலாசிரியர் ஒருவர் கூட மிகவும் துணிச்சலாக பெரிய மருதுவை விதவை ராணி வேலு நாச்சியார் “மறுமணம்” செய்து கொண்டதாக எழுதி இருக்கிறார். இதற்குச் சான்றாக அவர் சொல்லக் கூடிய ஆதாரங்கள் எதுவும் இருக்கிறதா அல்லது இருப்பதைக் குறிப்பிட்டு இருக்கிறாரா என்றால், அவரது சொல்விளக்கத்தை தவிர வேறு இல்லை.
இவையெல்லாம். ஆணுக்குப் பெண் சமம். ஆண்களைப் போன்று பெண்களுக்கும் வாய்ப்புகள், சொத்துரிமை, என்பன போன்ற உரிமைக்குரல் ஒலிக்கப்படுகின்ற இந்த இருபதாவது நூற்றாண்டின் இறுதியில் கூட, பெண்களை குறிப்பாக மேலிடத்து மகளிரை