பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 213

அறியாமையை ஆயுதமாகக் கொண்டு, எதைப் பற்றியும் எப்படியும் எழுதுவது என்பது நல்ல எழுத்தாளனது பண்பாகாது.

இந்த மன்னரது சாதனைகளாக வரலாற்றில் பல நிகழ்ச்சிகள் உள்ளன.

6.17.1891-ல் வெளியிடப்பெற்ற “Manual of Ramnad Samasthanam” என்ற நூலின் பக்கங்கள் 241/43 பார்த்தால் இந்த மன்னர் மிகப்பெரிய வெற்றி வீரன், தஞ்சை மராத்தியப் படைகளையும், மைசூர் தளபதியையும், டச்சுக்காரரது கப்பற்படை மிரட்டலையும், சிறப்பாக சமாளித்தவர் என்பதும் பல அறக்கொடைகளுக்கும் நாயகர் என்பதையும் அறியலாம்.

பக்கம் 100

“கான் சாகிப் கேட்டனுப்பிய கப்பத்தைத் தாங்கள் கட்டியாய் விட்டதா?' 'சென்ற வாரம்தான் அனுப்பி வைத்தேன்”

சேதுபதி மன்னர்கள் யாருக்கும் கப்பம் செலுத்தாதவர்கள் என்பதுதான் சென்னையில் உள்ள ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியரது ஆய்வுக்குழுவின் முடிவு. அத்துடன் சேதுபதி சீமை உள்ளிட்ட மதுரைச் சீமை கி.பி.1801 வரை ஆற்காட்டு நவாபுக்கு கட்டுப்பட்டு இருந்தது. மதுரை ஆளுநராக இருந்த கம்மாந்தன் கான் சாகிபு செல்லமுத்துத் தேவருடன் நல்ல உறவுகளைக் கொண்டு இருந்தார். செல்லமுத்து சேதுபதி மதுரைக் கான்சாகிபுக்கு கப்பம் செலுத்தினார் என்று குறிப்பிட்டு இருப்பது வரலாற்றுக்கு முரணான பொய்ச் செய்தி.

(பார்க்க; Yousuff Khan, the Rebel Commandant by S.C.Hill (1932). History of Pudukottai P.241)

பக்கம் 349

“அமைச்சரே இக்கணம் முதல் நமது பெரிய மருதுவை மகா சேனாதிபதியாக நியமிக்கிறேன்."

வெள்ளை மருதுவும் அவரது சகோதரரும் மன்னர் முத்து வடுகநாதர் ஆட்சிக் காலம் வரை அவரியம் அடைப்பம் பணியில்தான் இருந்து வந்தனர் (25.6.1772 வரை) கி.பி.1780-ல் ராணி வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்டிய பொழுதுதான் இந்த சகோதரர்களை சிவகங்கை பிரதானிகளாக நியமித்தார் என்பது வரலாறு.

(பார்க்க: மாவீரர் மருதுபாண்டியர் (1989)

பக்கம்: 362-364

"சேது நாட்டை அடைந்தன
தஞ்சைப் படைகள்......."
“காளையார் கோயிலிலிருந்து மறவர்