பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 243


பினாங்கில் இருந்து திரும்பி துரைச்சாமி உறுதிக்கோட்டை வரவில்லை. மதுரை வந்து அங்கு தங்கிவிட்டதுரைச்சாமி மணம்செய்து கொண்டோ அல்லது மணம் செய்து கொள்ளாமலோ வாரிசின்றி அங்கே காலமானார் எனத் தெரிகிறது.”

மேலே குறிப்பிட்டிருப்பதில் துரைச்சாமி மதுரையில் காலமானார் என்பது மட்டும்தான் உண்மை. தளபதி வெல்ஷா குறிப்பிட்டிருப்பது போல, துரைச்சாமி கைது செய்யப்பட்டு பினாங்கிற்கு அனுப்பப்பட்ட பொழுது அவருக்கு வயது 15 அல்ல இருபதிற்கு மேல். திருமணமாகி மகனும் இருந்தான். அந்தச் சிறுவனது பெயரும் மருது தான். அவர்கள் மீது பரிவு கொண்ட ஜமீன்தார் கெளரி வல்லப உடையாத் தேவர், பகைவரது குடும்பம் என்று கருதாமல் அவர்களுக்கு மாதந்தோறும் இருநூறு சுழி சக்கரம் பணம் (ரூ.253.9.11) வீதம் கி.பி.1805 வரை கொடுத்து உதவி வந்தார். பிறகு இராமநாதபுரம் ஜமீன்தார் அவரது ஆட்சிக் காலம் வரை (கி.பி.1812) அந்தக் குடும்பத்திற்கு மாதந்தோறும் படி கொடுத்து பராமரித்து வந்தார். பின்னர் அவர்கள் வறுமையில்தான் வாழ்ந்தனர். (பார்க்க தமிழ்நாடு ஆவணக் காப்பக மதுரை மாவட்ட தொகுதி 1669 பக்கம் 99)

பினாங்கில் இருந்து திரும்பியதுரைச்சாமி, மதுரை வந்து மாலபட காவல் துறை கண்காணிப்பாளரைச் சந்தித்து தாம் மதுரையில் தங்கி வாழ விரும்பவுதாகவும் அதற்கான உதவிகள் கோரி மனுக் கொடுத்தார். ஆனால் திடீரென்று அவரது உடல் நலம் மோசமாகி மரணமடைந்தார். (வைகாசி 11) அவரது சடலம் காளையார் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஜமீன்தார் கெளரி வல்லப உடையாத் தேவரது பொருட் செலவில் அவரது அடக்கம், அந்திமக் கிரிகையை நடத்தப்பட்டன.

இந்த விவரங்கள் அனைத்தும் துரைச்சாமியின் மகள் மருது சேர்வைக்காரர்கள் கி.பி.1821 மே மாதம் இராமநாதபுரம் கலைக்டருக்கு கொடுத்த மனுவில் காணப்படுகின்றன. (பார்க்க மதுரை மாவட்ட பதிவேடு தொகுதி 4669/பக்கம் 101-102)

இன்று காளையார் கோவில் ஆலயத்திற்கு எதிரில் உள்ள சந்தில் காணப்படும் சமாதியும் அங்குள்ள தனியான சிலையும் துரைச்சாமியாகத்தான் இருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

பக்கம்: 487

'போராளி இயக்கத்திற்குத் தன்னை அர்ப்பணிப்பதற்காக முத்துக் கருப்பத் தேவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இன்று இராமநாதபுரத்தில் உள்ள அவரது வழியினர் (அவருக்குத் திருமணம் ஆகாததால்) நேரடி வாரிசுகள் அல்ல. அண்ணன் தம்பி வழியினர்."