பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 249


தனியாரிடம் கூட தயங்காது கடன் வாங்கினார்.'

பக்கம்: 162

"படமாத்துார் பழம் பெருமை உள்ள ஊர்தான். இருப்பினும், அவ்வூர்ப் பாளையக்காரர் நாலுகோட்டை அரச குடும்பத்தினருக்கு உறவினர் அல்லர்."

பக்கம்: 642

"அக்டோபர் 24 சனிக்கிழமை விடிந்தது. சனிப்பிணம் தனி போகாது என்னும் பழமொழி அக்கினியூக்கு தெரிந்து இருக்குமோ என்னவோ! போராளிகள் பல நூறு பேரை ஒரே நாளில் தூக்கில் போட்டார்."

பக்கம்: 458

"... தமது சமூகத்தவர் அல்லாதவர்களால் அகமுடைய சமூகத்தவர் ஒருவரை ஏன் மரபுக்கு மாறாக அறிவிக்க வேண்டும். சிவகங்கையை அதற்கு முன் ஆட்சி புரிந்த சமூகத்தினை மருது பாண்டியர் சேர்ந்தவரல்லர் என்பதற்காக, தான் தொல்லை கொடுத்ததை எண்ணி வருந்தி. அதற்குக் கழுவாய் தேட மயிலப்பன் மூலம் அப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்தார்."

பக்கம்: 495

'... முத்துராமலிங்க சேதுபதிக்கு ஆதரவாக கிளர்ச்சி நடத்தி வந்த போராளித் தலைவர் மயிலப்பன் ஆங்கிலேயரால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து தப்பி அவர் அடைக்கலம் தேடிச் சென்றது எங்கு தெரியுமா? சிவகங்கைக்குத்தான்.'

பக்கம்: 589

ராஜ சூரிய சேதுபதிக்கு சந்ததி இல்லாமையால் சந்திரப்ப சேர்வைக்காரர் சமஸ்தானத்தை நடத்தி வந்தார். கிழவன் சேதுபதி தேர்வாகி கி.பி.1674-ல் அவர் முடி சூடும்வரை சந்திரப்ப சேர்வைக்காரரே, முடிசூடா மன்னராக சேதுநாட்டின் ஆட்சியை நடத்தி வந்தார்.'

பக்கம்: 592

"...புதுக்கோட்டைச் சீமையில் தொண்டமான்கள் பிரபலம் அடையுமுன்பே, பல்லவராயர்கள் என்னும் சேர்வை அரச பரம்பரையினர். சீரும் சிறப்புமாக நான்கு நூற்றாண்டுகள் ஆட்சி புரிந்ததும் வரலாற்றில் பதிவாகி உள்ள செய்திகள்.'