பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/273

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 253


தொகுதி - 1

1. சிவகங்கைச் சீமை செப்பேடுகள்

சிவகங்கைச் சீமை ஊர்களில் கள ஆய்வின்பொழுது, சிவகங்கைத் தன்னரசு மன்னர்கள் வழங்கிய செப்பேடுகளைப் போல, குடிமக்களும் தங்களுக்கிடையே பிடிபாடு, இசைவுமுறி, காணியாகி ஆகியவைகளை செப்பேடகளில் வெட்டி வைத்து இருப்பது கண்டறியப்பட்டது.

கிடைக்கப்பெற்ற இத்தகைய செப்பேடுகள் நான்கினையும் இங்கே உரிய குறிப்புகளுடன் வரலாற்று ஆய்வாளர்களது பயன்பாட்டிற்காக கொடுத்து இருக்கிறோம்.

வெள்ளக்குறிச்சி செப்பேடு

மறவர் சீமையின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த பண்டாரம் என்ற சமூகத்தினரின் (தற்பொழுதைய அரசு பதிவின்படி புலவர்கள்) தங்களது சமூகக் கட்டமைப்பை உறுதிப்படுத்தும் முகமாக, தங்கள் உறவின் முறையினருக்குள் மாமனார் மகனும் மாமியார் மகளும் மணவினை கொள்வதை கட்டாயப்படுத்தும் இசைவுமுறி இந்த செப்பேடு.

இந்தச் செப்பேட்டில் இருவது முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் (இந்த சமூகத்தினர் மறவர் சீமையில் - இராமநாதபுரத்திலிருந்து அரியவடிவம் வகையான அறுபத்து இரண்டு ஊர்களில் நிலைத்து இருந்ததை அறிவிக்கும் தொகுப்பு ஏடாக விளங்குகிறது.

இந்த இசைவுமுறி வசையப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள "சாலிவாகன சகாப்தம். 1561-ம் வருடம் ரெளத்திரி வருடத்திற்கு ஒத்துவரவில்லை. அத்துடன் இந்தச் செப்பேட்டின் வரி 63-ல் 'கும்பெனியாருக்கு அபராதம் பன்னிரண்டு பூவிராகன்" என்ற தொடரில் இருந்து இந்தச் செப்பேடு பதினெட்டாவது நூற்றாண்டின் இறுதியில் வரையப்பட்டிருக்க வேண்டும் என அறுதியிடப்படுகிறது.

1. சாலிவாஹன ஸஹாப்தம் 1561 ஸ்ரீஸ்ரீச
2. ரியான ரெளத்திரி ஸ்ரீ பங்குனி மீ யரு உ ஸ்ரீ மத்ஸே
3. து-நாதராகிய கூத்தநாதய்யறவர்களுக்கு அடியிற்கண்
4. ட தங்கள் வம்சத்தவர்களாகிய மடபதிகள் உரவின்முறை
5. யார்கள் நடக்கிர வுப்பந்ததிர்சூம் சாதிவுளுங்காய் நட்சுஷிரவிஷ
6. யத்திர்சூம் நாங்களும் எங்கள் வாரிசுகளும் தங்களுக்கும் தங்கள் வ
7. ரரிஸ்களுக்கும் எழுதிக்கொடுத்த வுப்பந்தமுரி, முதுகுளத்தூல் மடபதி சிவஜாண்டிப் புலவர் ஏமதேஸ்
8. வரம் நட்டுவாலிமுத்தழகு பண்டாரம். இராமநாதபுரம் நெருப்பாண்டி