பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 255

29. ம். வடவலாபுரம். திருமேனிப் பண்டாரம். முடிமன்னார் கோட்டை. திருவுப்புலவன். தெர்
30. க்கு தரைக்குடி. முதுமைய பண்டாரம். மண்டல மாணிக்கம் வாழவந்த பண்டாரம், தாமே
31. ரதரம்பட்டி. வயிரவ பண்டாரம். மாசவதத்தம் குருசாமி பண்டாரம். சங்கூரணி. குருசாமி
32. பண்டாரம். அரியனாபுரம். குமரபண்டாரம். மேலகண்ட மடபதிகள். பண்டாரிகள் உரவின்
33. முறையார்களாகிய, சகலத்திராளும் நம் ஜாதியில் நடந்து கொள்ள வேண்டிய விஷையத்தை
34. தப்பற்றி அடியிற்காட்டி இருக்கிரபடி நடந்து கொள்ளுவோமாகவும் / அதாவது மாம்
35. னார் மகனும் மாமியார் மகளும் சம்பந்தம் பண்ணுகிர தென்றும் அப்படி சம்பந்தம் பண்
36. ணாவிட்டால். குருபரம் உரவின் முறையார்களுக்கு அபராதம். முப்பத்திரெண்டு பொன் கொடுத்து
37. ஜாதிக்கு கீளப்படிந்து கொள்ளுகிற தென்றும் / இதுபோல் மாமியார். மகன் மாமன் மகளை
38. அன்னியில் போய் வேரே கலியாணம் பண்ணிக் கொண்டாலும் மேலகண்டபடி முப்பத்திர
39. ண்டு பொன் கொடுத்து சாதிக்கு கீழ்படிந்து கொள்கிரதென்றும் பெண்ணுக்குப் பருசம். அய்ந்
40. து பொன்னும் கலியாணத்துக்கு தீர்வை இருபத்தி அய்ந்து பொன்னும் கொடுத்து தீர்ந்து கொ
41. ள்ளுகிரதென்றும் ஒருத்தி புருஷனுடனே ஒருத்தி சேர்ந்து கொண்டு போனாலும் ரூபிகரமான
42. அத்தாட்சி வந்தாலும் தருமான தண்டனையும் தெண்டினையும் பண்ணி அபராதம் பண்ணிரண்
43. டு பொன்னும் பிரந்த பிள்ளைக்கு காணி இல்லை யென்றும் இந்தப்படி செய்கிறதென்றும். புரு
44. ஷன் பெண்டாட்டிக்கு தீர்வை துன்பம் வந்தாலும் ஆணாவது பெண்ணாவது மாட்டே
45. ஒ மென்றாலும் அப்பேர்பட்டவர்களுக்கு கட்டுத்தாலி தீர்வை பண்ணிரண்டு பொன்யென்
46. றும் குருவுக்கு தக்ஷணை பணம் வன்பதுங் கொடுத்து குருவினுடைய பாதத்தில் சாஸ்டாங்க
47. நமஸ்காரம் செய்து பஞ்சாட்சரம் வாங்கி தரித்துக் கொள்ளுகிரதென்றும் மாப்பிள்ளை
48. க்காரி இடத்தில் பெண்ணில்லாமல் போனால் அண்ணன் தம்பிக்கு சம்பந்தப்பட்ட இடத்தில் கூட
49. இருந்து கலியாணம் பண்ணுவிக்கிரதென்றும் பெண்காரனிடத்தில்