இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
306 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை
1. சிவகெங்கைச் சீமையின் சிறப்பான நிகழ்வுகள்:
கி.பி.1728 | சேதுபதி சீமையில் இருந்து சிவகெங்கைச் சீமை என்ற தன்னரசு உதயம். | |
1736 | புனித சின்ன சவேரியர் சருகணி வட்டாரத்தில் சமுதாயப் பணிகள் தொடக்கம். | |
1738. | மதுரைச் சீமையில் ஆற்காட்டு நவாப் ஆட்சி ஏற்பட்டதும் பயந்துபோன மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலய நிர்வாகிகள், கோயிலை அடைத்து இறைவன், இறைவி திருமேனிகளை சிவகங்கை சமஸ்த்தான மானாமதுரைக்கு எடுத்து வந்தது. | |
1749. | முதலாவது மன்னர் அரசு நிலையிட்ட சசிவர்ண பெரிய உடையாத்தேவர் மரணம் - இளையான்குடியில் மேலப்பள்ளிவாசல் நிர்மாணம். | |
1751. | காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு மாறநாட்டு புலவர் சேரி சர்வமான்யமாக வழங்கப்பட்டது. சருகனியில் புதிதாக தேவாலயம் நிர்மாணம். | |
1755. | இராமநாதபுரம் சேதுபதி மன்னருடன் மன்னர் முத்துவடுகநாதர் மதுரையில் கும்பெனி தளபதி ஹெரானைச் சந்தித்தது. | |
1762. | நெல்லைச் சீமை படையெடுப்பில் கம்மந்தான் கான்சாகிபிற்கு உதவ சிவகெங்கைச் சீமை மறவர் அணி திருநெல்வேலி செல்லுதல். | |
1763. | மதுரை ஆளுநர் கம்மந்தான் கான்சாகிபு திருப்புவனம் கோட்டையை தாக்கி சேதப்படுத்தியது. | |
1771. | தஞ்சை மன்னர் துல்ஜாஜியின் படை எடுப்பும் பின்வாங்குதலும். | |
1772. | காளையார்கோவில் கோட்டைப் போரில் மன்னர் முத்து வடுக நாதர் பகைவரது குண்டுபட்டு தியாகியானது. (25.6.1772), ராணி வேலு நாச்சியார், குழந்தை வெள்சச்சியுடனும் பிரதானி தாண்டவராய பிள்ளையுடனும் திண்டுக்கல் சீமை விருபாட்சியில் தஞ்சம் | |