பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


தொகுதி - III

1. சிவகெங்கைச் சீமையின் சிறப்பான நிகழ்வுகள்:

கி.பி.1728 சேதுபதி சீமையில் இருந்து சிவகெங்கைச் சீமை என்ற தன்னரசு உதயம்.
1736 புனித சின்ன சவேரியர் சருகணி வட்டாரத்தில் சமுதாயப் பணிகள் தொடக்கம்.
1738. மதுரைச் சீமையில் ஆற்காட்டு நவாப் ஆட்சி ஏற்பட்டதும் பயந்துபோன மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலய நிர்வாகிகள், கோயிலை அடைத்து இறைவன், இறைவி திருமேனிகளை சிவகங்கை சமஸ்த்தான மானாமதுரைக்கு எடுத்து வந்தது.
1749. முதலாவது மன்னர் அரசு நிலையிட்ட சசிவர்ண பெரிய உடையாத்தேவர் மரணம் - இளையான்குடியில் மேலப்பள்ளிவாசல் நிர்மாணம்.
1751. காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு மாறநாட்டு புலவர் சேரி சர்வமான்யமாக வழங்கப்பட்டது.
சருகனியில் புதிதாக தேவாலயம் நிர்மாணம்.
1755. இராமநாதபுரம் சேதுபதி மன்னருடன் மன்னர் முத்துவடுகநாதர் மதுரையில் கும்பெனி தளபதி ஹெரானைச் சந்தித்தது.
1762. நெல்லைச் சீமை படையெடுப்பில் கம்மந்தான் கான்சாகிபிற்கு உதவ சிவகெங்கைச் சீமை மறவர் அணி திருநெல்வேலி செல்லுதல்.
1763. மதுரை ஆளுநர் கம்மந்தான் கான்சாகிபு திருப்புவனம் கோட்டையை தாக்கி சேதப்படுத்தியது.
1771. தஞ்சை மன்னர் துல்ஜாஜியின் படை எடுப்பும் பின்வாங்குதலும்.
1772. காளையார்கோவில் கோட்டைப் போரில் மன்னர் முத்து வடுக நாதர் பகைவரது குண்டுபட்டு தியாகியானது. (25.6.1772), ராணி வேலு நாச்சியார், குழந்தை வெள்சச்சியுடனும் பிரதானி தாண்டவராய பிள்ளையுடனும் திண்டுக்கல் சீமை விருபாட்சியில் தஞ்சம்