இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
310 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை
ஐந்தாவது ஜமீன்தாராகப் பதவி ஏற்றது. | ||
1862 | வைகையாற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு. | |
1864. | முதலாவது ஜமீன்தார் படைமாத்தூர் கெளரி வல்லபத்தேவரது ஒரே மகள் காத்தம நாச்சியார் பிரிவு கவுன்சில் நீதிமன்ற ஆணை மூலமாக ஆறாவது ஜமீன்தாராக பதவி ஏற்றது. | |
1871 | மக்கட் கணிப்பு (சென்சஸ்) முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டது. | |
1876 | தாது வருடப் பஞ்சம். | |
1877 | சிவகெங்கை ஜமீன்தாரியை கிருஷ்ணசாமி செட்டி என்பவருக்கு ராணி காத்தமநாச்சியார் 1.5.1877-ல் குத்தகைக்கு விட்டது. | |
1874. | திருச்சிராப்பள்ளி மகாவித்வான் மீனாட்சி சுந்தாம்பிள்ளை செட்டி நாட்டில் சுற்றுப்பயணம். | |
1877 | ராணி காத்தமநாச்சியார் மரணம் 24.5.1877. | |
1876. | கெளரிவல்லபத்தேவரது பெயரில் துரைசிங்கத்தேவர் ஏழாவது ஜமீன்தாராக பதவி ஏற்றது. | |
1881. | இரண்டாவது மக்கட் கணிப்பு நடத்தப் பெற்றது. | |
1883. | ஜமீன்தார் துரைச்சிங்கத் தேவர் மரணம். அவரது மகன் பெரியசாமித்தேவர் என்ற உடையணத்தேவர் எட்டாவது ஜமீன்தார். சிவகெங்கையில் மன்னர் உயர்நிலைப்பள்ளி தொடக்கம். | |
1884 | இடைக்காட்டுரில் அழகிய தேவாலயம் நிர்மாணிக்கப்பட்டது. மாவட்டத்தில் தாலுகா போர்டுகள் நிறுவப்பட்டன. | |
1844 | இரண்டாவது ஜமீன்தாரது சகோதரர் இரண்டாவது கெளரிவல்லபத்தேவர் நான்காவது ஜமீன்தாராக பதவி ஏற்றது. | |
1888. | சிவகெங்கை ஜமீன்தாரியை இருபத்து இரண்டு ஆண்டுகால குத்தகைக்கு ஜமீன்தார் கொடுத்தது. | |
1894 | சிவகெங்கை நகரில் அலீஸ்மில்லர் மகளிர் பள்ளி தொடக்கம். | |
1895 | சிவகெங்கையில் வழக்குரைஞர் சங்கம் நிறுவப்பட்டது. | |
1897 | இராமநாதபுரத்திலிருந்து மதுரை செல்லும் சுவாமி | |