பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

1925 காரைக்குடியில் தமிழ்க்கடல் ராய செக்கலிங்கன் மற்றும் நகரத்தார் இளைஞர்கள் காங்கிரசில் இணைந்து தொண்டாற்ற தொடங்கியது.
1927 மானாமதுரை வைகை ஆற்று பாலத்தை ஜில்லா போர்டு தலைவராக இருந்த சேதுபதி மன்னர் திறந்து வைத்தது.
1927 சிவகெங்கையில் பிரம்மஞான சபை அன்னிபெசண்ட் அம்மையாரால் தொடங்கப்பட்டது.
காந்தியடிகள் திருப்பத்தூர் சிராவயல் காரைக்குடி வருகை.
காரைக்குடி இந்து மதாபிமான சங்கம் தமிழில் வழங்கிய சிறப்பு வரவேற்புகளை பெற்றுக்கொண்டது.
அமராவதி புதுாரில் ராய சொக்கலிங்கனாரது விருந்தினராக தங்கமல்.
1928. காரைக்குடியில் நகராட்சி மன்றம் அமைப்பு மானாமதுரையில் சைமன் கமிஷனை எதிர்த்து மாபெரும் மக்கள் பேரணி.
1930 மாவட்டம் முழுவதும் இந்திய தேசிய காங்கிரஸ் தொண்டர்கள் தீவிர பிரச்சாரம்.
பள்ளத்துாரில் நவமணி இதழ் வெளியீடு.
காரைக்குடி சிவகெங்கை வழியாக மானாமதுரை திருச்சி ரயில் தடம் அமைப்பு. சட்ட மறுப்பு இயக்கம். மாவட்டம் முழுவதும் தேசிய தொண்டர்கள் கைது.
1930. இளையான்குடி முஸ்லீம் நெசவுப்பட்டறை சங்கம் அமைப்பு.
1932 சிவகெங்கையில் ஜமீன்தாரது நடுநிலைப்பள்ளி தொடக்கம். சீமை முழுவதும் கள்ளுக்கடைகள், அன்னிய துணை விற்பனை நிலையங்கள் முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் மறியல். கைது.
திருப்பத்துார் முஸ்லீம் தொண்டர்கள் மதுரை சென்று அங்குள்ள பெரிய துணிக்கடையான ஹாஜிமூசா கோட் துணிக்கடை முன்பு மறியல். கைது.
மானாமதுரையில் வேல்ஸ் இளவரசர் படிப்பகம் மீது குண்டுவீச்சு.