பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 329



சேகரிக்கப்பட்டுள்ள
மன்னர் செப்பேடுகள் (சுருக்கம்)
1. சசிவர்ண பெரிய உடையாத் தேவர் சகம், 1655 ஆனந்த, கார்த்திகை 26-ம் தேதி சிதம்பரம் சத்திய வாசக சுவாமி யாருக்கு, இமனீச்சுரத்தில் மடம் பராமரிக்க நிலங்கள் தானம்.
2. " சகம் 1655 பிரமாதீச ஸ்ரீ சித்திரை
21. ம் தே கோவானூர் சாத்தப்ப ஞானியாருக்கு சிவகங்கையில் திருக்குளம் வெட்டி, தவசு மடம் கட்டி பூசை செய்ய சோழபுரத்தில் நிலங்கள் தானம்.
3. சகம் 1661 காளயுக்தி ஆவணி மாதம் கிருஷ்ண பட்ச சுக்கிரவாரம் பெருவயல் ரணபலி முருகன் ஆலய பூஜைக்கு, திருவெத்தியூர் கிராமம் தானம்.
4. முத்து வடுகனாதப் பெரிய உடையாத் தேவர் சகம் 1662 ரவுத்தி ஸ்ரீ ஆனி 12-ந்தேதி திருவாவடுதுறை மடத்து மகேசுர பூசைக்கு, நெட்டூர் குறிச்சி கிராமம் தானம்.
5. " சகம் 1664 துந்துபி கார்த்திகை 12-ந்தேதி திருப்புவனம் வெங்கடேசுவர அவதானிக்கு அம்பலத்தாடி கிராமம்தானம்.
6. " சகம், 1672 பிரமோதூத சித்திரை மாதம் திருவாரூர் தியாகராஜ சுவாமி, அன்ன தானத்திலும், தேர்போக நாட்டு நாதன் வயல் பாணன் வயல் கிராமங்கள் தானம்.
7. " சகம் 1682 விசு வருஷம் சித்திரை மாதம் 15-ந்தேதி சதுரகிரி குழந்தையானந்த பண்டார மடம், மேல்நெட்டுரில் நிலம்.
8. " சகம். 1685 சுபானு ஸ்ரீ சித்திரை மாதம் 14-ந் தேதி தருமபுரம் குமரகுருத் தம்பிரானுக்கு வள்ளைக்குளம் கிராமம் தானம்.